February 22, 2026, 1:57 AM
26.7 C
Chennai

சுடுகாட்டு பிரச்னை! பேராவூரணி அருகே சாலையில் பிணத்தை வைத்து மறியல்!

peravurani-road-roko

பேராவூரணி அருகே பேராவூரணி – புதுக்கோட்டை மெயின் சாலையில் பிணத்தை வைத்து சாலை மறியல்:

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பிணத்தை ரோட்டில் இறங்கி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர் .

செங்கமங்கலம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் ஐந்து தலைமுறைகளாக யாதவர், ஐயர், தேவர், அம்பலகாரர்கள், ஆசாரியார் உள்ளிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை இறுதி சடங்கு செய்வது வழக்கம்.

அதேபோல் ,இன்று செங்கமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த செல்லத்துரை (வயது 65) என்பவர் இறந்துவிட்டார் . அவரின் இறுதிச் சடங்கு உண்டான வேலைகளை சுடுகாட்டில் அம்பலகாரர்கள் செய்துவந்த நிலையில், இதனை அறிந்த யாதவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இந்த சுடுகாடு எங்களுக்கு சொந்தமானது… இதில் நீங்கள் இறுதி சடங்குகள் நடத்த அனுமதி இல்லை என தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அம்பலகாரர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிணத்தை பேராவூரணியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் மெயின் சாலையில் செங்கமங்கலம் அருகே இறக்கி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதில் அதிகமான பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

தகவலறிந்த பட்டுக்கோட்டை உதவி கண்காணிப்பாளர் (பொறுப்பு) சுப்பிரமணியன் சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோரின் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது அந்த சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்யுங்கள், இது சம்பந்தமாக வட்டாட்சியர் மூலமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என கூறி சாலை மறியலை கைவிடச் செய்தனர் . அரை மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories