தேர்தல் நெருங்கிவிட்டது. வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக., மற்றும் அதிமுக.,வினர் பேசும் மேடைப் பேச்சுக்கள் இப்போது பேசு பொருள் ஆகியிருக்கிறது. சமூகத் தளங்களில் சில வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
அதிமுக., அமைச்சர்கள் சிலர் பேசும் பேச்சுகள் சமூகத் தளங்களில் பலராலும் பகிரப் பட்டு, திமுக.,வுக்கு எதிரான பிரசாரக் களத்தை உசுப்பேற்றி வருகிறது. அவற்றில் ஒன்றாக, அமைச்சர் சிவி . சண்முகம் பேசும் பேச்சு ஒன்று வைரலாகி வருகிறது. அதில், இலவச அறிவிப்புகள் குறித்து சொல்லிக் காட்டும் சிவி சண்முகம், திமுக., பொய்யான வாக்குறுதிகளையே கொடுத்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி ஸ்டாலினையும் திமுக.,வையும் வசைபாடி இவ்வாறு பேசுகிறார்….
நகை கடன் எல்லாத்தையும் தள்ளுபடி செய்திடுவேன் என்று சொன்னான்… செய்தானா. ? 39 எம்பி ஜெயித்தான்… டெல்லிக்கு போனான் … ராஜ்யசபை எம்பி எல்லாம் சேர்த்து இதுவரை 50 எம்பி இருக்கிறான். இதுவரை நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி ஆவது குரல் கொடுத்திருக்கிறானா? நாங்கள் நகைக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.. நீங்கள் எங்களுக்கு நிதி ஒதுக்குங்கள் என்று… ஒரு எம்பி இதுவரை பேசி இருக்கிறானா?
அவன் அப்பன் ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கிறேன் என்று சொன்னானே! கொடுத்து இருக்கிறானா? இப்பவும் சொல்லுவான்… இந்த தேர்தலுக்கும் வருவான்… ஏதாவது வாய்க்கு வந்ததை சொல்லுவான்… வாக்குறுதிகளை எல்லாம் சொல்லுவான் … உங்க வீட்டுக்காரரிடம் கூட சொல்லுவான்…. நீ எனக்கு ஓட்டு போட்டா உனக்கு ரெண்டு பொண்டாட்டி அப்படின்னு! இவங்களும் வாயை திறந்து ஆவென்று இருந்தபடி ஓட்டுப் போடுவான்…
மானங்கெட்டவன் எதைவேண்டுமானாலும் சொல்லுவான்! அவனுக்கு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லை! மக்களை ஏமாற்றி மக்களை மயக்கி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வரணும்! பதவியில் உட்காரணும்… அப்புறம் எல்லாத்தையும் பார்த்துக்கலாம்…
இதுதான் அவர்களின் நோக்கம் என்று சிவி சண்முகம் பேசும் பேச்சு இப்போது வைரலாகி வருகிறது…