திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில், தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் நிகழ்த்தப்படும் பன்னாட்டுக் கருத்தரங்கை உடனே தடை செய்ய வேண்டும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில்…
வருகின்ற டிசம்பர் 6 7 தேதிகளில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் என்கிற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் என்கிற போர்வையில் தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி கம்பராமாயணம் வில்லிபாரதம் பட்டினத்தார் பாடல்கள் ஆகிய தமிழ் இலக்கியங்கள் மற்றும் இந்து இதிகாசங்களை கொச்சைப்படுத்தும் இழிவான நோக்குடனும் தமிழகம் முழுவதும் மதக்கலவரத்தை தூண்டும் குறிக்கோளுடனும் கிறித்தவ மிஷனரிகள் மற்றும் அர்பன் நக்சல்கள் திட்டமிட்டுள்ளனர்…
ஒரு கிறித்தவ கல்லூரி தமிழ் இலக்கியங்கள் மற்றும் இந்து மத புனித நூல்களை இழிவுபடுத்த பின்புலம் என்ன என்கிற கேள்வி எழுகிறது சிறுபான்மை சமுதாயம் பெரும்பான்மை சமுதாயத்தையும் நம் தாய்மொழி தமிழ் இலக்கியங்களை இழிவுபடுத்த அனுமதிக்கமுடியாது
உடனடியாக தமிழக அரசு நிகழ்ச்சிக்கு தடை விதித்து பின்னணியில் உள்ளவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் தமிழ் இலக்கியங்களின் மாண்பினை காத்திட வேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.
— H Raja (@HRajaBJP) November 24, 2018