இதிகாசங்களை இழிவுபடுத்தும் சென் ஜோசப் கல்லூரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க அரசுக்கு ஹெச்.ராஜா வேண்டுகோள்!

Published:

st joseph college trichy - 2026

திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில், தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் நிகழ்த்தப்படும் பன்னாட்டுக் கருத்தரங்கை உடனே தடை செய்ய வேண்டும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில்…

வருகின்ற டிசம்பர் 6 7 தேதிகளில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் என்கிற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் என்கிற போர்வையில் தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி கம்பராமாயணம் வில்லிபாரதம் பட்டினத்தார் பாடல்கள் ஆகிய தமிழ் இலக்கியங்கள் மற்றும் இந்து இதிகாசங்களை கொச்சைப்படுத்தும் இழிவான நோக்குடனும் தமிழகம் முழுவதும் மதக்கலவரத்தை தூண்டும் குறிக்கோளுடனும் கிறித்தவ மிஷனரிகள் மற்றும் அர்பன் நக்சல்கள் திட்டமிட்டுள்ளனர்…

ஒரு கிறித்தவ கல்லூரி தமிழ் இலக்கியங்கள் மற்றும் இந்து மத புனித நூல்களை இழிவுபடுத்த பின்புலம் என்ன என்கிற கேள்வி எழுகிறது சிறுபான்மை சமுதாயம் பெரும்பான்மை சமுதாயத்தையும் நம் தாய்மொழி தமிழ் இலக்கியங்களை இழிவுபடுத்த அனுமதிக்கமுடியாது

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

உடனடியாக தமிழக அரசு நிகழ்ச்சிக்கு தடை விதித்து பின்னணியில் உள்ளவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் தமிழ் இலக்கியங்களின் மாண்பினை காத்திட வேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img