அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாயப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவுகள் முதல் உள்கர்நாடகா வரை வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தில் பனிப்பொழிவின் தாக்கம் அடுத்த 2 நாட்களுக்கு குறைந்தே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.