நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

shami ind - 2026

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா, கேப்டன் விராத் கோஹ்லி அரை சதமடித்து கைகொடுத்தனர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலதில் மூன்றாவது போட்டி மவுன்ட் மவுன்கனுய் நகரில் இன்று நடைபெற்றது. காயம் காரணமாக தோனி ஓய்வெடுக்க, அவருக்கு பதிலாக தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் களம் இறங்கினார். போட்டியில் விளையாட தடை இருந்த நிலையில், தடையில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா இந்தப் போட்டியில் அணிக்கு திரும்பினார்.

இந்தப் போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியினருக்கு துவக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். முகமது ஷமி ‘வேகத்தில்’ முன்ரோ (7) ஆட்டமிழக்க, புவனேஷ்வர் பந்தில் மார்டின் கப்டில் (13) வெளியேறினார். கேப்டன் வில்லியம்சன் (28), சகால் ‘சுழலில்’ சிக்கினார். பொறுப்பாக ஆடிய ராஸ் டெய்லர் அரை சதம் அடித்தார். சகால் பந்தில் லதாம் (51) ஆட்டம் இழந்தார்.. ஹர்திக் பாண்ட்யா ‘வேகத்தில்’ நிக்கோல்ஸ் (6), சான்ட்னர் (3) ஆட்டம் இழந்தனர். ராஸ் டெய்லர் (93), இஷ் சோதி (12) ஷமி பந்தில் ஆட்டமிழக்க, பிராஸ்வெல் (15) ரன் அவுட் ஆனார். புவனேஷ்வர் குமார் பந்தில் பவுல்ட் (2) ஆட்டமிழந்தார். இதை அடுத்து நியூசிலாந்து அணி, 49 ஓவரில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 3, புவனேஷ்வர், சகால், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

தொடர்ந்து இந்திய் அணி 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஷிகர் தவான் (28) ரோகித் சர்மா (62), கேப்டன் விராத் கோஹ்லி (60) நல்ல அடித்தளத்தை அமைத்ததால், வெற்றி எளிதானது. அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஜோடி அணியை வெற்றி பெறச் செய்தது. அம்பதி ராயுடு (40), கார்த்திக் (38) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி 43 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் 2வது முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா. இதற்கு முன், 2009ல் தோனி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது!

முகமது ஷமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவர் 41 ரன் கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். இந்த தொடரில் முகமது ஷமி பெறும் இரண்டாவது ஆட்டநாயகன் விருது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories