December 5, 2025, 11:31 PM
26.6 C
Chennai

நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

shami ind - 2025

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா, கேப்டன் விராத் கோஹ்லி அரை சதமடித்து கைகொடுத்தனர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலதில் மூன்றாவது போட்டி மவுன்ட் மவுன்கனுய் நகரில் இன்று நடைபெற்றது. காயம் காரணமாக தோனி ஓய்வெடுக்க, அவருக்கு பதிலாக தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் களம் இறங்கினார். போட்டியில் விளையாட தடை இருந்த நிலையில், தடையில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா இந்தப் போட்டியில் அணிக்கு திரும்பினார்.

இந்தப் போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியினருக்கு துவக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். முகமது ஷமி ‘வேகத்தில்’ முன்ரோ (7) ஆட்டமிழக்க, புவனேஷ்வர் பந்தில் மார்டின் கப்டில் (13) வெளியேறினார். கேப்டன் வில்லியம்சன் (28), சகால் ‘சுழலில்’ சிக்கினார். பொறுப்பாக ஆடிய ராஸ் டெய்லர் அரை சதம் அடித்தார். சகால் பந்தில் லதாம் (51) ஆட்டம் இழந்தார்.. ஹர்திக் பாண்ட்யா ‘வேகத்தில்’ நிக்கோல்ஸ் (6), சான்ட்னர் (3) ஆட்டம் இழந்தனர். ராஸ் டெய்லர் (93), இஷ் சோதி (12) ஷமி பந்தில் ஆட்டமிழக்க, பிராஸ்வெல் (15) ரன் அவுட் ஆனார். புவனேஷ்வர் குமார் பந்தில் பவுல்ட் (2) ஆட்டமிழந்தார். இதை அடுத்து நியூசிலாந்து அணி, 49 ஓவரில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 3, புவனேஷ்வர், சகால், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து இந்திய் அணி 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஷிகர் தவான் (28) ரோகித் சர்மா (62), கேப்டன் விராத் கோஹ்லி (60) நல்ல அடித்தளத்தை அமைத்ததால், வெற்றி எளிதானது. அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஜோடி அணியை வெற்றி பெறச் செய்தது. அம்பதி ராயுடு (40), கார்த்திக் (38) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி 43 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் 2வது முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா. இதற்கு முன், 2009ல் தோனி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது!

முகமது ஷமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவர் 41 ரன் கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். இந்த தொடரில் முகமது ஷமி பெறும் இரண்டாவது ஆட்டநாயகன் விருது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories