ஆயிரக்கணக்கான பிரதிகள்.. 2 லட்சம் பிடிஎப்.. ஒரே நாளில் விற்று தீர்ந்த ரபேல் புத்தகம்; தேர்தல் ஆணையம் கொடுத்த இலவச விளம்பரம் காரணமாக இந்த ”நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” பெரிய ஹிட் அடித்து இருக்கிறது.
முதலில் இந்த புத்தக வெளியீட்டு விழா தடை செய்யப்பட்ட உடனே, புத்தகத்தின் பிடிஎப் காப்பி வெளியானது. இணையம் முழுக்க பலரிடம் பரப்பப்பட்டது. பேஸ்புக்கில் பலர் இந்த ”நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” புத்தகத்தின் பிடிஎப் பைலை ஷேர் செய்து இருந்தனர்…
ஒரு புத்தகத்தின் விலை ரூ.15. இப்படி 8 ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததாம். அதன் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒரே நாளில் புத்தகம் விற்றுள்ளதாகவும், மேலும் 20 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க உள்ளதாகவும் பதிப்பகத்தார் கூறியுள்ளனர்.
எனவே இப்படி ஒரு 48 பக்க நூலை 10 ஆயிரம் பிரதிகள் முதல்கட்ட அச்சே செய்திருக்கிறார்கள் எனும் போது, ஏதோ எதிர்பார்ப்புடனும் திட்டமிடலுடனும் பதிப்பகத்தாரும் ஹிந்து என்.ராமும் இணைந்து மேற்கொண்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. காரணம், எந்த ஒரு நூலையுமே முதல் பிரதி என ஆயிரம், அல்லது இரண்டாயிரம்தான் அச்சிட்டு வைப்பர். அதன் பின்னர் இரண்டாம் பதிப்பு அல்லது தொடர்ந்து பதிப்புகள் வரும். விற்பனையைப் பொறுத்து!
ஆனால் முதல் பதிப்பே பத்தாயிரம் பிரதிகளும் அச்சிட்டு, வெறும் நூறு பிரதிகள் வாங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று முன்னதாக பதிப்பகத்தார் கூறிய நிலையில், திடீரென தேர்தல் ஆணையத்தில் இருந்து அதிகாரிகள் வந்து நூலுக்கு தடை விதித்ததாகவும், நூல் வெளியிடக் கூடாது என்று சொன்னதாகவும், இது தேர்தல் விதி மீறல் என்றதாகவும் கூறி ஒரு தகவலைப் பரப்பி, விளம்பரம் கொடுத்தனர்.
ஆனால் இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹுவிடம் கேட்டபோது, இப்படி ஒரு விஷயமே தங்களுக்குத் தெரியாது என்றும், தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்பதாகவும் கூறினார்.
எனவே, சென்னையின் உள்ளூர் தேர்தல் அதிகாரி அல்லது அலுவலகத்தில் உள்ள யாரோ சில கம்யூனிஸ்ட் திராவிட இயக்க சார்புள்ள அதிகாரிகளை வைத்து, இத்தகைய நாடகத்தை ஹிந்து ராம் மற்றும், பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தார் நடத்தியிருப்பதாகவே பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர்.
இந்நிலையில், சம்பந்தப் பட்ட ஊடகங்கள் சார்பில் இணையத்தில் வெளியான தகவல் இது…
உலகம் முழுக்க அடக்குமுறைக்கு உள்ளான எழுத்தாளர்கள் பெரிய அளவில் வைரலாகி இருக்கிறார்கள். சாதாரண புத்தகங்களை விட தடை செய்யப்பட்ட புத்தகங்கள்தான் அதிக மக்களால் உலகம் முழுக்க விரும்பி படிக்கப்பட்டு இருக்கிறது. அப்படிதான் தற்போது ரபேல் புத்தகமும் வைரலானது.
ரபேல் ஊழல் தொடர்பாக வெளியாக இருந்த ”நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு தேர்தல் ஆணையம் நேற்று தடை விதித்து இருந்தது. “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” என்ற புத்தகம் எழுத்தாளர் எஸ். விஜயன் மூலம் எழுதப்பட்டது. ரபேல் பேரத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து அவர் இந்த புத்தகத்தில் விவரித்து இருக்கிறார்.
ரபேல் வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் இந்த புத்தகம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கான புத்தக வெளியீட்டு விழா பாரதி புத்தகாலயம் சார்பாக சென்னை கேரளா சமாஜத்தில் இன்று நடக்க இருந்தது. தி இந்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக இருந்தது . இந்த நிலையில் “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது.
ஆனால் அதன்பின் இதை சென்னை தேர்தல் அதிகாரிகள் தவறுதலாக தடை செய்துவிட்டதாக கூறப்பட்டது . பின் தேர்தல் ஆணையம் இந்த புத்தகத்தை வெளியிட அனுமதி அளித்தது. அதன்பின் நேற்று மாலையே இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த தடை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தேர்தல் ஆணையமும் விளக்கம் கேட்டு இருக்கிறது.
என்னதான் தமிழக இலக்கிய உலகம் தற்போது பெரிய அளவில் வளர்ந்து கொண்டு இருந்தாலும் மக்கள் புத்தகம் வாங்கி படிப்பது மிகவும் குறைந்துவிட்டது. முக்கியமாக தமிழ் புத்தகங்கள் முன்பு போல இப்போதெல்லாம் பெரிய அளவில் விற்பனை செய்து சாதனை படைப்பது கிடையாது. இந்த ரபேல் புத்தகமும் அப்படித்தான் குறைந்த அளவில் ஆர்வம் உள்ளவர்களால் மட்டுமே வாங்கப்படும் என்று கருதப்பட்டது.
ஆனால் நிஜத்தில் நடந்தது வேறு. தேர்தல் ஆணையம் கொடுத்த இலவச விளம்பரம் காரணமாக இந்த ”நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” பெரிய ஹிட் அடித்து இருக்கிறது. முதலில் இந்த புத்தக வெளியீட்டு விழா தடை செய்யப்பட்ட உடனே, புத்தகத்தின் பிடிஎப் காப்பி வெளியானது. இணையம் முழுக்க பலரிடம் பரப்பப்பட்டது.
பேஸ்புக்கில் பலர் இந்த ”நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” புத்தகத்தின் பிடிஎப் பைலை ஷேர் செய்து இருந்தனர். வாட்ஸ் ஆப் முழுக்க இந்த புத்தகம் பலருக்கு ஷேர் செய்யப்பட்டது. விளைவு நேற்று மட்டும் இரவுக்குள் 2 லட்சத்திற்கும் அதிகமான ”நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” பிடிஎப் பைல்கள் தமிழகத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.
அதுமட்டுமல்ல நேற்று பிரச்சனைகளுக்கு பின் நடந்த புத்தக வெளியீட்டு விழாவிலும் புத்தகம் படுவேகமாக விற்றுத் தீர்த்தது. சுமார் 100+ புத்தகங்கள் முதற்கட்டமாக விற்கும் என்று கருதப்பட்ட நிலையில் மொத்தமாக 8000+ புத்தகங்கள் இரண்டு மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தது. தமிழகம் முழுக்க ஒரே நாளில் இந்த புத்தகம் வைரல் ஆனது.
ஆனால் இத்தனையும் நடந்தது வெறும் 146 பிரதிகளை கைப்பற்றியதால்தான் என்பதை நம்ப முடிகிறதா. நேற்று இந்த 146 ”நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” புத்தகத்தின் பிரதிகளை கைப்பற்றியதால்தான் பெரிய சர்ச்சை உருவானது. அதன் தொடர்ச்சியாகத்தான் புத்தகம் தமிழகம் முழுக்க வைரலாகி இருகிறது.
இந்நிலையில், பாஜக.,வைச் சேர்ந்த எஸ் ஜி சூர்யா என்பவர், ரபேல் குறித்த கேள்விகளை முன்வைத்து ஒன்றைப் பரப்பி பதிவு செய்தார்.
இதனிடையே, ரபேல் ஊழல் குறித்த புத்தகம் பற்றிய கேள்விகளை முன்வைக்கிறார்கள்… இப்படி! … ….
ரபேல் ஊழல் என புத்தகமே அடித்திருக்கின்றார்கள், இதோ மாபெரும் ஊழல் என சொல்லிக் கொள்கின்றார்கள்!
ஒரு ஊழல் என்றால் இதோ பயன்பெற்றவர் விவரம் என தெரியப் படுத்தவேண்டும், இந்த பணம் இவர் கைகளுக்கு இப்படி சென்றது என்பதை உறுதிபடுத்த வேண்டும்! அப்படி ஏதும் செய்யவில்லை !
மாறாக இது போபர்ஸ் ஊழலுக்கு சமம் என ஒரே அலறல், இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் காங்கிரசாரே போபர்சுக்கு சமம் என சொல்வது! போபர்ஸ் வழக்கில் குவாத்ரோச்சி பகிரங்கமாக குற்றம் சாட்டபட்டார்! 65 கோடி ரூபாய் காங்கிரஸ் பெயரை சொல்லி அவர் அமுக்கிவிட்டதாக சர்ச்சை, ராஜிவ் தன் கரம் சுத்தமானது என நிரூபிக்க முயன்ற பொழுது செத்தார்!
குவாத்ரொச்சி உலகம் சுற்றும் வாலிபனாக வாழ்வாங்கு வாழ்ந்து செத்தார். ஆனால் ரபேல் விவகாரம் அப்படி அல்ல, ஒருவர் மேலும் கைகாட்ட முடியவில்லை, எல்லாமே யூகம்! உண்மையில் என்ன நடந்தது?
2004ல் இருந்தே அழுது கொண்டிருந்த விமானபடைக்கு ரபேலை வாங்குவதாக காங்கிரஸ் அரசு ஒப்பந்தமிட்டது ! எண்ணிக்கை 100 ஆனால் அதிக நுட்பம் இல்லாத விமானம் ! அதைக் கண்ட விமானபடை மறுபடியும் அலறியது நவீன நுட்பமான ரபேலே எங்கள் தேவை என அது தன் நியாயமான தேவையினை சொன்னது
பாகிஸ்தானின் எப்16 சீனாவின் ஜே 7 போன்றவற்றை சமாளிக்க மேம்படுத்தப்பட்ட ரபேல் வேண்டும் என்றது! நவீன வசதிகளுடன் 36 விமானமா இல்லை அடிப்படை வசதியுடன் 100 விமானமா என தவித்த மத்திய அரசு பின் நவீன 36 ரகம் வாங்கலாம் மீதியினை அமெரிக்க எப்21 என வாங்கலாம் என முடிவெடுத்தது
நிச்சயம் நல்ல முடிவு நாட்டுக்கு தேவையான முடிவு – இதில்தான் அம்பானி வந்துவிட்டார் என்கின்றார்கள், இந்த அரசு மட்டுமல்ல அ த காங்கிரஸ் அரசே அம்பானியுடன் சில ஒப்பந்தங்களை செய்தது!
இது சாதாரண அசெம்ப்ளிங் போன்றவை என்பதாலும் எச்.ஏ.எல் 80 தேஜஸ் ரக விமானங்களை விமானபடைக்கு அவசரமாக செய்வதாலும் அதை இழுக்கவில்லை
நடந்தது இதுதான்!
இதில்தான் ஊழல் என ஒரே ஆட்டம், சரி ஊழல் பணம் யாருக்கு சென்றது? மோடிக்கா? நிர்மலாவுக்கா? இல்லை வேறு எந்த ஆயுத புரோக்கருக்கு என கேட்டால் பதிலே இல்லை! அம்பானி திவாலாகி அவரும் வீழ்ந்து கிடக்கின்றார் அவரையும் குற்றம் சாட்டவில்லை! அவர்களும் “தேனை எடுத்தவன் கையினை நக்க மாட்டானா?” எனும் புகழ்பெற்ற தத்துவத்தை சொல்லவுமில்லை!
யாரையுமே கைகாட்டாமல் ஊழல் ஊழல் என்பது நிச்சயம் சரி அல்ல! இந்த நிகழ்வில் இந்து ராம் என்பவர் வருகின்றார், அவர்தான் “மவுண்ட் ரோடு மகா விஷ்ணு” என கலைஞரால் முன்பு கட்டம் கட்டபட்டவர்! ஜெயா கூட அவரை பல இடங்களில் தட்டி வைத்திருந்தார்!
இருவரும் இல்லா இடத்தில் அவரிடம் மாற்றம் தெரிகின்றது, திடீர் திராவிடம் பேசுகின்றார் அண்ணா உத்தமன் என்கின்றார்! 1960களில் இதே இந்து பத்திரிகை என்னவெல்லாம் எழுதியது? அன்று கசந்த அண்ணா இன்று இனிக்கின்றாராம்
ஏதோ உள்நோக்கத்துடன் ரபேல் ஊழல் என கிளம்பிவிட்டார்கள்! எம்மால் ஒருவிஷயம் உறுதியாக சொல்லமுடியும்!
பாகிஸ்தான் 2008ல் அமெரிக்காவிடமிருந்து எப்16ஐ வாங்கும் பொழுதே இந்திய விமானபடை மன்மோகன் அரசிடம் கெஞ்சியது! அவர்களோ இழுத்தடித்து 2013 வாக்கில் ஒப்புதல் அளித்துவிட்டு அதுவும் நவீனமில்லா விமானங்களை ஒப்புக்கு சப்புக்கு சொல்லிவிட்டு ஓடிவிட்டார்கள் என்ன நிர்பந்தமோ?!
ஆனால் மோடி அரசு வாங்க வேண்டியதை ரபேலில் வாங்கியபின் எங்கோ கோபம் வெடித்திருக்கின்றது! எங்கென்றால் ரபேலுக்கு பதிலாக தன் விமானங்களை விற்க முடிவு செய்த ஏதோ ஒரு நாட்டுக்கு சினம் வந்திருக்கின்றது! வசமாக இங்குள்ள அரசியல்வாதிகளை தூண்டிவிட்டுவிட்டார்கள்!
விஷயம் சிக்கலாகி ரபேல் இன்னும் வரவில்லை அது இந்திய விமானபடைக்கு பெரும் பின்னடைவே! அதை ஏதோ ஒரு சக்தி மவுனமாக ரசிக்கின்றது! அந்த பின்னடைவினை கொடுத்ததுதான் காங்கிரஸும் அதன் அடிப்பொடிகளும்!
நாட்டை நேசிப்போர் அந்த ரபேல் வந்து விமானபடையினை வலுபடுத்துவதை விரும்புவார்களா? இல்லை ஊழல் ஊழல் என கத்தி தடுப்பார்களா?
மகா அவசரத்தில் ரபேலை கோரிய விமானபடை இந்த அழிச்சாட்டிய அரசியலால் மவுன கண்ணீர் விடுகின்றது! இவர்கள் செய்துகொண்டிருப்பது மாபெரும் தேசவிரோதம், நடப்பதை நாட்டுமக்கள் கவனித்து கொண்டேதான் இருக்கின்றனர்.!