புது தில்லி: பாகிஸ்தானின் எப்-16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை இந்திய விமானப்படை துணை ஏர் மார்ஷல் ஆர்.கே.ஜி.கபூர், ரேடார் படங்களை வெளியிட்டு உறுதி செய்து விளக்கம் அளித்தார்.
தில்லியில் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தது..
எப்-16 ரக விமானங்கள் அனைத்தும் தங்களிடம் பத்திரமாக உள்ளதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எப்-16 ரக விமானங்களை பயன்படுத்தியது உறுதி.
இந்திய விமானி அபிநந்தன் இயக்கிய மிக்-21 ரக விமானம் மூலம் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ரேடாரில் பதிவாகியுள்ளது. அதற்கான படங்களில் இவை தெளிவாகத் தெரிகின்றன… என்று விளக்கம் அளித்தார்.
#WATCH: Air Vice Marshal RGK Kapoor in the radar images shows the location of the shooting down of F-16 of Pakistan Air Force (PAF) by Indian Mig piloted by Wing Commander Abhinandan pic.twitter.com/CPuf2qf0nT
— ANI (@ANI) April 8, 2019
அபிநந்தன் ஓட்டிச்சென்ற மிக்-21 விமானம் மூலம் பாகிஸ்தானின் எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
எப்-16 விமானத்தை பாகிஸ்தான் இழந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன
எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ரேடார் பதிவுகளை வெளியிட்டது இந்திய விமானப்படை.
அபிநந்தன் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானின் எப்-16விமானம் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தது.
- எப்-16விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பாக். மறுத்த நிலையில் இந்திய விமானப்படை விளக்கம்.