சிலை அரசியல்! இரு காட்சிகள்; இரு நீதிகள்! தேவை பகுத்தறிவு!

hraja veeramani - 2026

தமிழகத்தின் நீதி – ஓர் ஒப்பீடு…!

காட்சி 1: சற்றேறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு
திரிபுரா மாநில தேர்தலில் கம்யூனிஸ்ட் தோற்று பாஜக ஜெயித்தவுடன் அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது.

அது போல இங்கும் தமிழகத்தில் திரு ராமசாமி நாயக்கரின் சிலையும் அகற்றப்படலாம் என திரு H ராஜா முக நூலில் பதிவு போட்டதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும், பா ஜ க தலைமை அவரை அடக்கி வைக்க வேண்டும், என்று திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு திருமாவளவன், திமுக மற்றும் தமிழகத்தில் சமுக ஆர்வலர்கள் என சொல்லி கொள்ளும் போலி போராளிகள் முழங்கினார்கள்.அவர் மேல் வன்முறையையும் ஏவ சில கட்சிகள் முயற்ச்சித்தன.

மேலும் திரு ராமசாமி நாயக்கர் சிலை மேல் செருப்பு மாலையை ஒரு நபர் போட்டதால் அவர் மேல் வழக்கு போட்டு அவரை சிறையிலும் அடைத்தனர்.
அவரை போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்து செல்லும் போது திராவிட கழக அபிமானிகள் அவரை அடிக்கவும் செய்தனர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

அப்போது திரு ராஜா அது அட்மின் செய்த தவறு, இருப்பினும் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார்.

இருப்பினும் ஊடகங்களும், திமுக, திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் ராஜாவையும், செருப்பு அணிவித்த அந்த வக்கீலை மட்டுமே கண்டித்தனர்.அவர்கள் மேல் வழக்கும் போட்டனர்.

திரு ராமசாமி நாயக்கரை அவதூறாக பேசுவது தவறு,குற்றம் எனக்கூறி ஆர்பாட்டம் நடத்தினர்.

வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்களை இந்த கட்சிகளோ ஊடகங்களோ கண்டிக்கவில்லை.எதிர்வினை இப்படித்தான் ஆற்றப்படும் என்கின்ற ரீதியில் பேசினர்.

காட்சி 2: சில தினங்களுக்கு முன்பு திராவிட கழக திரு வீரமணி, இந்த பிரபஞ்சத்திற்கே முதன் முதலில் ஞான ஆன்மிக வாழ்வியல் தத்துவ நெறிகளை பகவத்கீதை மூலம் உரைத்த சர்வ லோக நாயகன் கிருஷ்ண பகவான் தன்னுடைய குழந்தை பருவத்தில் ஆறு வயதிலே செய்த விளையாடல்களை காம கண்ணுடன் பார்த்து கேவலமாக பேசியுள்ளார்.

அதற்கு எதிர்வினையாக திருச்சியில் வீரமணி,திமுக கூட்டணிக்கு பிரசாரம் செய்யும் போது உணர்வுள்ள சில இந்துக்கள் வீரமணிக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.சிலர் அடிதடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

சராசரி மனிதர் திரு ராமசாமி நாயக்கரை விமர்சனம் செய்யும் போது பொங்கிய கட்சிகள,ஊடகங்கள், திரு திருமாவளவன், மற்றும் போலி சமுக போராளிகள் சர்வ லோக நாயகன் Sri கிருஷ்ணரை இழிவாக விமர்சனம் செய்த வீரமணிக்கு எதிராக பொங்கவில்லை.

மாறாக திருமா கூறுகிறார்… வீரமணிக்கு எதிரான சனாதன சக்திகளை அழிக்க வேண்டும். வீரமணிக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும், வன்முறை கூடாது”

காட்சி ஒன்றில், பேசிய எச் ராஜா தண்டிக்கப்பட வேண்டும், கண்டிக்கப்பட வேண்டும். அடக்கப்பட வேண்டும்.

காட்சி இரண்டில், பேசிய வீரமணி பாதுகாக்கப்பட வேண்டும்,கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்.

ஆனால் வீரமணிக்கு எதிராக பேசியவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் தண்டிக்கப் பட வேண்டும்.

நாக்கு ஒன்றுதான். ஆனால் நீதி இரண்டு.

தமிழக மக்கள், திராவிட கட்சிகள், தமிழக ஊடகங்கள் மற்றும் திருமாவளவனின் இரட்டை வேடங்களை உணர வேண்டும்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். திருச்சியிலே எதிர்ப்பை காட்டியதன் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார்கள். நம்முடைய ஒற்றுமையை உணர்வை ஜனநாயக முறையில் காட்ட அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ALSO READ:  177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

அந்த வாய்ப்பு 18.4.2019 அன்று வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டோமென்றால் இந்த கட்சிகளின் இந்துக்களுக்கு எதிரான இரட்டை நிலை, அவதூறு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1 COMMENT

  1. உண்மையான இந்து உணர்வு உள்ள ஒவ்வொருவரும் மொத்த திராவிட கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். தேர்தலுக்கு நிதி இல்லை என்று சொல்கிறார்.சிதம்பரம் கோவிலுக்குள்ளே போய் தீக்ஷதர்களைக் கும்பிட்டு திருநீறு பூசிக்கொள்ள திருமாவிற்கு கொஞ்சமும் வெட்கமில்லை.வீரமணி இந்துக்களை மட்டும் எப்போதும் கேவலப் படுத்துவார். பிராமணர்கள் பூணூலாக கயிறை அணிந்தால் என்ன பாம்பை அணிந்தால் தான் என்ன. இவருக்கு என்ன வந்தது? பெரியார் சிலைக்கு மாலை போட்டு வணங்குவது மூட நம்பிக்கை இல்லையா? அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. இதில் அடுத்தவன் ஏன் தலையிட வேண்டும்? இவர்கள் எல்லோருமே ஒதுக்கப் படவேண்டியவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories