About the author
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
திடீரென சரிந்து கவிழ்ந்த முருகன் தேர்: பக்தர்கள் சோகம்!
இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக, இன்று காலை பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துள்ளனர். அப்போது, திருவீதி உலா வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென தேர் சரிந்து கவிழ்ந்துள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அழகர் மலையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார் கள்ளழகர்: பக்தர்கள் பரவசம்!
அங்கே நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர், இரவு பொய்கைக் கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் நள்ளிரவு 1 மணிக்கு எழுந்தருளுகிறார். காதக்கிணறு, கடச்சனேந்தல், சர்வேயர் காலனி வழியாக மூன்று மாவடிக்கு வருகிறார்.
அழகர் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர்
அழகர் மலையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார் கள்ளழகர்: பக்தர்கள் பரவசம்!
காவிரியில் தமிழகத்தின் உரிமையை தாரை வார்த்தவர் கருணாநிதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக அப்போது அழுத்தம் கொடுத்திருந்தால் காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும். காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
நிர்மலா தேவி விவகாரம்: யாரையோ காப்பாற்ற என் கணவரை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என முருகன் மனைவி புலம்பல்
கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நிர்மலாதேவி என் கணவரை சந்தித்து இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுமாறு கோரினார். ஆனால் என் கணவர் இது தொடர்பாக என்னிடம் எதுவும் பேசவேண்டாம், கல்லூரி நிர்வாகத்திடம் போய் பேசுங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்துவிட்டார். இது தவிர என் கணவருக்கும் நிர்மலா தேவிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை...
ராகுலுக்கு விமான ஓட்டி லைசன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ள ஜோதிமணி..!
ராகுல் அவரே ஒரு விமான ஓட்டி என்பதால் அந்த அசாதாரண சூழலில் கொஞ்சம் கூட பதட்டமடையாமல் விமான ஓட்டிகளின் அருகிலிருந்து வழிநடத்தி நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்து, விமானம் அவசரமாக தரையிறங்க உதவியிருக்கிறார். இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அய்யாக்கண்ணு மெரீனாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை!
முன்னதாக, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளித்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதியின் உத்தாவுக்கு எதிராக மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. தமிழக அரசின் மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையை விதித்தது.
பாலிவுட் படங்களை சீனாவில் அதிகம் திரையிட அதிபர் ஜீ ஜின்பிங் ஆர்வம்!
இந்திய திரைப்படங்கள் அதிகமாக சீனாவிலும், சீனப் படங்கள் இந்தியாவிலும் திரையிடப்பட வேண்டும் என்பது தொடர்பான பேச்சு இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் போது இடம் பெற்றுள்ளதாக கோகலே கூறினார்.
மோடியின் சீன பயணம் நிறைவு! இதயங்களை வென்ற இந்தியா!
மோடியின் சாய் பர் சர்ச்சா என்ற நிகழ்ச்சி பிரபலமாக இருந்தது. டீ குடித்துக் கொண்டே, நாட்டு மக்களிடம் பிரச்னைகள் குறித்து விவாதிப்பது அந்த நிகழ்ச்சியின் நோக்கம். அது போல் சீனாவிலும் அதிபர் ஜீ ஜின்பிங்குடன் டீ குடித்துக் கொண்டே, பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இது தனக்கு இனிய அனுபவமாக இருந்தது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
கோவை குட்கா ஆலை குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: ராமதாஸ் கோரிக்கை!
தமிழகத்தில் 35 லட்சம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.இவ்வாறு சமூகத்தை சீரழிக்க துணை போனவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
கோலாகலமாய் நடந்த மதுரை சித்திரைத் தேரோட்டம்!
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதைக் காண சுற்று வட்ட மாவட்டங்களிலிருந்தும் அதிகாலை முதலே பக்தர்கள் மாசி வீதிகளில் குவியத்தொடங்கினர். தேரோட்டத்தை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
சிறப்பாக நடந்த நெல்லையப்பர் கோயில் குடமுழுக்கு: சர்ச்சையை கிளப்பிய விஜிலா சத்யானந்த்
இதை அடுத்து இந்து அமைப்புகள் விஜிலா சத்யானந்த் விவகாரத்தை கையிலெடுக்க முடிவு செய்துள்ளன. கிறிஸ்தவர் எப்படி இந்துக்கள் ஆகம விதியை மீறி செயல்படலாம் என போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.