பாலிவுட் படங்களை சீனாவில் அதிகம் திரையிட அதிபர் ஜீ ஜின்பிங் ஆர்வம்!

modi chai pe charcha2 - 2026
பாலிவுட் திரைப்படங்களை சீனாவில் அதிகம் திரையிட வேண்டும் என்று கலாசார பரிமாற்ற உணர்வுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் விரும்புவதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே கூறியுள்ளார். மேலும் அவர், சீன அதிபருக்கு பாலிவுட் படங்கள் மீது தனிப்பட்ட விருப்பம் உள்ளது; பாலிவுட் மற்றும் மாநில மொழிப் படங்களையும் அவர் ரசித்துப் பார்த்துள்ளார் என்று கூறியுள்ளார்.

இந்திய திரைப்படங்கள் அதிகமாக சீனாவிலும், சீனப் படங்கள் இந்தியாவிலும் திரையிடப்பட வேண்டும் என்பது தொடர்பான பேச்சு இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் போது இடம் பெற்றுள்ளதாக கோகலே கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய கோகலே, “இந்தியா – சீனா இடையே பொழுதுபோக்கு அம்சங்களில் ஒரு கூட்டுறவு ஏற்படுத்துவது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜி ஜின்பெங் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே பொழுதுபோக்கு அம்சத்தில் ஒத்துழைப்பு ஏற்பட்டு, இந்தியப் படங்கள் அதிகமாக சீனாவிலும், சீனப் படங்கள் இந்தியாவிலும் திரையிடப்பட வேண்டும் என்பது சீன அதிபரின் விருப்பம்” என்று கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டன. இந்த முறை ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்து ஆகவில்லை என்றாலும், அதற்கான முன்னேற்பாடுகளை விரிவாகப் பேசியுள்ளனர். இந்தியா – சீனா இடையே பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடையும் வகையில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி, ஏழ்மை, ஏற்றத்தாழ்வுகளை களைய நடவடிக்கை எடுக்க யோசித்துள்ளன. மேலும், உலக அளவிலான சுகாதாரம், பேரிடர் அபாயங்கள் போன்றவற்றிலும் தங்களது கூட்டுறவை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

இவை மட்டுமல்லாமல், உலகின் மிகப் பழைமையான கலாசாரங்களுக்கு சொந்தக்காரர்களான இரு நாடுகளும், கலாசாரத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் பேசியிருப்பது வித்தியாசமான பயணத்தை நோக்கி சீனா நடைபோடுவதையே வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories