காவிரியில் தமிழகத்தின் உரிமையை தாரை வார்த்தவர் கருணாநிதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

edappadi pazanisamy - 2026

திருவாரூர்: மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் திருவாரூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை கர்நாடகத்துக்கு தாரை வார்த்தவர் கருணாநிதி என்று, கருணாநிதியின் சொந்த ஊரிலேயே பேசினார்.

அவர் மேலும்பேசிய போது, காவிரி ஆற்றில் கர்நாடகா பல அணைகளைக் கட்டியபோது கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்த போதும்கூட காவிரி பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி பிரச்னையை தீர்க்க 2007இல் மத்திய அரசுக்கு திமுக எந்த அழுத்தமும் கொடுக்காதது ஏன்?

திமுக அப்போது அழுத்தம் கொடுத்திருந்தால் காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும். காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

நேரத்துக்கு தகுந்தது போல் நிறத்தை மாற்றிக் கொள்ளும் கட்சி அதிமுக இல்லை. காவிரி பிரச்னையில் செய்த தவறுகளை மறைக்கவே ஸ்டாலின் நடைப் பயணம் மேற்கொள்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுப்பப்பட்டிருக்கிறது. காவிரிக்காக உண்ணாவிரதம் இருந்தவர் ஜெயலலிதா. கருணாநிதியைப் போல் இல்லாமல், ஜெயலலிதா தான் பதவியில் இருந்த போதெல்லாம் காவிரிக்காகப் போராடினார். சட்டப் போராட்டம் நடத்தினார்… – என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories