காவிரியில் தமிழகத்தின் உரிமையை தாரை வார்த்தவர் கருணாநிதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Published:

edappadi pazanisamy - 2026

திருவாரூர்: மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் திருவாரூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை கர்நாடகத்துக்கு தாரை வார்த்தவர் கருணாநிதி என்று, கருணாநிதியின் சொந்த ஊரிலேயே பேசினார்.

அவர் மேலும்பேசிய போது, காவிரி ஆற்றில் கர்நாடகா பல அணைகளைக் கட்டியபோது கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்த போதும்கூட காவிரி பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி பிரச்னையை தீர்க்க 2007இல் மத்திய அரசுக்கு திமுக எந்த அழுத்தமும் கொடுக்காதது ஏன்?

திமுக அப்போது அழுத்தம் கொடுத்திருந்தால் காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும். காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

நேரத்துக்கு தகுந்தது போல் நிறத்தை மாற்றிக் கொள்ளும் கட்சி அதிமுக இல்லை. காவிரி பிரச்னையில் செய்த தவறுகளை மறைக்கவே ஸ்டாலின் நடைப் பயணம் மேற்கொள்கிறார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுப்பப்பட்டிருக்கிறது. காவிரிக்காக உண்ணாவிரதம் இருந்தவர் ஜெயலலிதா. கருணாநிதியைப் போல் இல்லாமல், ஜெயலலிதா தான் பதவியில் இருந்த போதெல்லாம் காவிரிக்காகப் போராடினார். சட்டப் போராட்டம் நடத்தினார்… – என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img