ரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பயணியை காப்பாற்றிய மனிதநேயர்

ramamoorthy - 2026

ரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பயணிக்கு செல்போன் போன்  மூலம் நம்பிக்கையூட்டி ஒருவரின் உயிரைக்  காப்பாற்றிய ரயில்வே ஊழியர் ராமமூர்த்தி  மதுரை காளவாசலை சேர்ந்தவர் நாகராஜன் (53) இவர் அப்பகுதியில் கடை வைத்துள்ளார் அண்மையில் சென்னையில் இருந்து வைகை விரைவு ரயிலில், முன்பதிவு பெட்டியில் மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். இந்த ரயில் விழுப்புரம் வருவதற்கு 40 கிலோ மீட்டர் தூரம் முன்பாக நாகராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் துடிப்பதை பார்த்து அதே ரயிலில் வந்து கொண்டிருந்த நுகர்வோர் அமைப்பு நிர்வாகி ரவீந்திரன் மதுரையில் செஞ்சிலுவை சங்க மாநில பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர் .கோபாலகிருஷ்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இந்த விவரத்தை உடனடியாக மதுரையில் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையத்தில் பணிபுரியும் ராமமூர்த்தியை தொடர்பு கொண்டு கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
இதைத் தொடர்ந்து விழுப்புரம் ரயில் நிலைய அலுவலர்களை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ்சை தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் நாகராஜனின் இதய செயல்பாட்டை நீட்டிப்பதற்கான முதலுதவி சிகிச்சை முறைகளை செல்போன் மூலமாக ராமமூர்த்தி (இவர் அக்குபஞ்சர் மற்றும் எலக்ட்ரோபதி மருத்துவ நிபுணரும் ஆவார்) ரவீந்திரனிடம் செல்போன் மூலம்
மாரடைப்பு ஏற்பட்ட நபரை சுற்றி கூட்டம் கூடாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் மாத்திரை ஒன்றை அவரது நாக்கின் அடியில் வைத்து ,தலையை குனிந்து இருக்கும் படி பார்த்துகொள்ளவேண்டும் எனவும் அடிக்கடி இரும செய்ய வேண்டும் என செல்போனில் தகவல் சொல்ல அதை ஏற்று செயல்பட்டதால் நாகராஜனின் இதய செயல்பாடு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டது.
விழுப்புரம் ரயில் நிலையம் வந்ததும் அங்கு ஏற்கனவே தயாராக இருந்த 108 ஆம்புலன்சில் நாகராஜன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவர் உடல் நலத்துடன் உள்ளார்.
எலக்ட்ரோபதி மருத்துவ நிபுணரும் ரயில்வே ஊழியருமான  ராமமூர்த்தி கூறுகையில்
ரயில் பயணித்தின்போது யாருக்கேனும் மாரடைப்பு வந்தால் நோயாளியை நன்றாக இருமாறு கூற வேண்டும். அடிக்கடி இருமினால் இதயத்தின் செயல்பாடு நிற்பது தடுக்கப்படும். அடுத்து சிகிச்சை அளிக்க மருத்துவர் தயாராக இருக்கிறார். ஒன்றும் ஆகாது என தொடர்ந்து சொல்லி நோயாளிக்கு மன தைரியம் கொடுக்க வேண்டும். இவ்வாறு சொல்வதால் நோயாளிக்கு நிச்சயம் நம்மை காப்பாற்றி விடுவார்கள் என்ற தைரியம் ஏற்படும்.
ரயில் பயணித்தின் போது யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் பயணிகள் அபாயச் சங்கிலியை பிடித்து மருத்துவ உதவிகள் எதுவும் இல்லாத திக்குத் தெரியாக இடத்தில் ரயிலை நிறுத்தி விடக்கூடாது.
அவ்வாறு நிறுத்தப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க 20 நிமிடங்கள் ஆகும். மேலும் எந்த வசதியும் இல்லாத இடங்களில் ரயில்களை நிறுத்தும்போது ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்கள் வருவதில் சிரமம் ஏற்படும். இதனால் ஏற்படும் தாமதம் உயிரிழப்புக்கு காரணமாக அமையும் என்றார்.
ஓடும் ரயிலில் பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் ராமமூர்த்தியை சக ஊழியர்கள், பயணிகள் பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories