ரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பயணியை காப்பாற்றிய மனிதநேயர்

ramamoorthy - 2026

ரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பயணிக்கு செல்போன் போன்  மூலம் நம்பிக்கையூட்டி ஒருவரின் உயிரைக்  காப்பாற்றிய ரயில்வே ஊழியர் ராமமூர்த்தி  மதுரை காளவாசலை சேர்ந்தவர் நாகராஜன் (53) இவர் அப்பகுதியில் கடை வைத்துள்ளார் அண்மையில் சென்னையில் இருந்து வைகை விரைவு ரயிலில், முன்பதிவு பெட்டியில் மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். இந்த ரயில் விழுப்புரம் வருவதற்கு 40 கிலோ மீட்டர் தூரம் முன்பாக நாகராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் துடிப்பதை பார்த்து அதே ரயிலில் வந்து கொண்டிருந்த நுகர்வோர் அமைப்பு நிர்வாகி ரவீந்திரன் மதுரையில் செஞ்சிலுவை சங்க மாநில பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர் .கோபாலகிருஷ்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இந்த விவரத்தை உடனடியாக மதுரையில் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையத்தில் பணிபுரியும் ராமமூர்த்தியை தொடர்பு கொண்டு கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
இதைத் தொடர்ந்து விழுப்புரம் ரயில் நிலைய அலுவலர்களை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ்சை தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் நாகராஜனின் இதய செயல்பாட்டை நீட்டிப்பதற்கான முதலுதவி சிகிச்சை முறைகளை செல்போன் மூலமாக ராமமூர்த்தி (இவர் அக்குபஞ்சர் மற்றும் எலக்ட்ரோபதி மருத்துவ நிபுணரும் ஆவார்) ரவீந்திரனிடம் செல்போன் மூலம்
மாரடைப்பு ஏற்பட்ட நபரை சுற்றி கூட்டம் கூடாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் மாத்திரை ஒன்றை அவரது நாக்கின் அடியில் வைத்து ,தலையை குனிந்து இருக்கும் படி பார்த்துகொள்ளவேண்டும் எனவும் அடிக்கடி இரும செய்ய வேண்டும் என செல்போனில் தகவல் சொல்ல அதை ஏற்று செயல்பட்டதால் நாகராஜனின் இதய செயல்பாடு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டது.
விழுப்புரம் ரயில் நிலையம் வந்ததும் அங்கு ஏற்கனவே தயாராக இருந்த 108 ஆம்புலன்சில் நாகராஜன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவர் உடல் நலத்துடன் உள்ளார்.
எலக்ட்ரோபதி மருத்துவ நிபுணரும் ரயில்வே ஊழியருமான  ராமமூர்த்தி கூறுகையில்
ரயில் பயணித்தின்போது யாருக்கேனும் மாரடைப்பு வந்தால் நோயாளியை நன்றாக இருமாறு கூற வேண்டும். அடிக்கடி இருமினால் இதயத்தின் செயல்பாடு நிற்பது தடுக்கப்படும். அடுத்து சிகிச்சை அளிக்க மருத்துவர் தயாராக இருக்கிறார். ஒன்றும் ஆகாது என தொடர்ந்து சொல்லி நோயாளிக்கு மன தைரியம் கொடுக்க வேண்டும். இவ்வாறு சொல்வதால் நோயாளிக்கு நிச்சயம் நம்மை காப்பாற்றி விடுவார்கள் என்ற தைரியம் ஏற்படும்.
ரயில் பயணித்தின் போது யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் பயணிகள் அபாயச் சங்கிலியை பிடித்து மருத்துவ உதவிகள் எதுவும் இல்லாத திக்குத் தெரியாக இடத்தில் ரயிலை நிறுத்தி விடக்கூடாது.
அவ்வாறு நிறுத்தப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க 20 நிமிடங்கள் ஆகும். மேலும் எந்த வசதியும் இல்லாத இடங்களில் ரயில்களை நிறுத்தும்போது ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்கள் வருவதில் சிரமம் ஏற்படும். இதனால் ஏற்படும் தாமதம் உயிரிழப்புக்கு காரணமாக அமையும் என்றார்.
ஓடும் ரயிலில் பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் ராமமூர்த்தியை சக ஊழியர்கள், பயணிகள் பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories