அழகர் மலையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார் கள்ளழகர்: பக்தர்கள் பரவசம்!

kallalagar alagarmalai - 2026
மதுரை: வைகை ஆற்றில் இறங்கி அன்பர்களுக்கு அருள் பாலிப்பதற்காக, அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கிப் புறப்பட்டார் கள்ளழகர். அழகர் மலையில் கூடியிருந்த பக்தர்கள் பரவசத்தில் பலத்த கோஷம் எழுப்பினர்.

மதுரைக்கு வரும் அழகரை ஆங்காங்கே எதிர்சேவை செய்து கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் வரவேற்கின்றனர். காணும் திசை எங்கும் கோவிந்தா முழக்கம்தான். பக்தர்களின் பக்தி கோஷம் காண்போரை உணர்ச்சிகரமாக்குகிறது. சிலரின் பக்தர்களின் அதீத பக்தியின் வெளிப்பாடு மெய் சிலிர்க்கவைக்கிறது.
கள்ளழகர் கோயில் மதில் சுவர் முகப்பு வழியே வெளியே வந்த போது, அன்பர்கள் பலர் ஆடிப் பாடி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அப்போது விண்ணை பிளக்கும் அதிர்வேட்டுகள் முழங்கின. அது மதுரை நகர் வரை எட்டியது. சித்திரைத் திருவிழாவைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு அந்த அதிர்வேட்டுச் சத்தம், மதுரை நோக்கிய கள்ளழகரின் புறப்பாட்டை கோடிட்டுக் காட்டியது.

மதுரை சித்திரைத் திருவிழாவைக் காண வெவ்வேறு இடங்களில் இருந்தும் வந்து குவிந்திருக்கும் பக்தர்களைக் காண அழகரும் பட்டுடுத்தி தங்கப் பல்லக்கில் அழகர் மலையில் இருந்து தனது பரிவாரங்களுடன் மதுரை நோக்கிப் புறப்பட்டார். ஆலயத்தின் கோட்டை வாசலை விட்டு வெளியே வந்த கள்ளழகர், அங்கே கோபுர வாசல் கதவில் எழுந்தருளியிருக்கும் கருப்பண்ணசாமி சந்நிதி அருகேயுள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கே நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர், இரவு பொய்கைக் கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் நள்ளிரவு 1 மணிக்கு எழுந்தருளுகிறார். காதக்கிணறு, கடச்சனேந்தல், சர்வேயர் காலனி வழியாக மூன்று மாவடிக்கு வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு எதிர்சேவை செய்கின்றனர். தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இளைப்பாறும் அழகர் 30ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories