அழகர் மலையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார் கள்ளழகர்: பக்தர்கள் பரவசம்!

kallalagar alagarmalai - 2026
மதுரை: வைகை ஆற்றில் இறங்கி அன்பர்களுக்கு அருள் பாலிப்பதற்காக, அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கிப் புறப்பட்டார் கள்ளழகர். அழகர் மலையில் கூடியிருந்த பக்தர்கள் பரவசத்தில் பலத்த கோஷம் எழுப்பினர்.

மதுரைக்கு வரும் அழகரை ஆங்காங்கே எதிர்சேவை செய்து கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் வரவேற்கின்றனர். காணும் திசை எங்கும் கோவிந்தா முழக்கம்தான். பக்தர்களின் பக்தி கோஷம் காண்போரை உணர்ச்சிகரமாக்குகிறது. சிலரின் பக்தர்களின் அதீத பக்தியின் வெளிப்பாடு மெய் சிலிர்க்கவைக்கிறது.
கள்ளழகர் கோயில் மதில் சுவர் முகப்பு வழியே வெளியே வந்த போது, அன்பர்கள் பலர் ஆடிப் பாடி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அப்போது விண்ணை பிளக்கும் அதிர்வேட்டுகள் முழங்கின. அது மதுரை நகர் வரை எட்டியது. சித்திரைத் திருவிழாவைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு அந்த அதிர்வேட்டுச் சத்தம், மதுரை நோக்கிய கள்ளழகரின் புறப்பாட்டை கோடிட்டுக் காட்டியது.

மதுரை சித்திரைத் திருவிழாவைக் காண வெவ்வேறு இடங்களில் இருந்தும் வந்து குவிந்திருக்கும் பக்தர்களைக் காண அழகரும் பட்டுடுத்தி தங்கப் பல்லக்கில் அழகர் மலையில் இருந்து தனது பரிவாரங்களுடன் மதுரை நோக்கிப் புறப்பட்டார். ஆலயத்தின் கோட்டை வாசலை விட்டு வெளியே வந்த கள்ளழகர், அங்கே கோபுர வாசல் கதவில் எழுந்தருளியிருக்கும் கருப்பண்ணசாமி சந்நிதி அருகேயுள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கே நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர், இரவு பொய்கைக் கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் நள்ளிரவு 1 மணிக்கு எழுந்தருளுகிறார். காதக்கிணறு, கடச்சனேந்தல், சர்வேயர் காலனி வழியாக மூன்று மாவடிக்கு வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு எதிர்சேவை செய்கின்றனர். தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இளைப்பாறும் அழகர் 30ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories