ஓட்ஸ் சம்பா ரவை இட்லி
தேவையானவை:
ஓட்ஸ் – ஒரு கப்,
சம்பா கோதுமை ரவை – அரை கப்,
தயிர் – ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்),
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஓட்ஸை வறுத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு, சம்பா ரவையை சிவக்க வறுத்து, இரண்டையும் கடைந்த தயிரில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்க்கவும்.
கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 10, 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு, இந்தக் கலவையை இட்லிகளாக செய்து பரிமாறவும்