ஊழல், மனித உரிமை மீறல், மனித வாழ்வின் விழுமியங்களின் வீழ்ச்சி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த நாளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அரசாங்கங்கள், தனியார் அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதியை இந்த தினம் நினைவுபடுத்துகிறது.
2003 முதல் டிசம்பர் 9 ஊழல் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
ஊழலும் லஞ்சம் வாங்குவதும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே எண்ணி பொதுமக்களை சுரண்டும் அரசியல்வாதிகள் மிகுந்த இந்நாட்களில் இந்த தினம் முக்கியத்துவம் பெறுகிறது.
இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்