வெளில போக பாஸ் வாங்கணும்னா… நீங்க இதெல்லாம் செய்யணும்!

Published:

epass application1 - 2026

தெலங்காணா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் நீங்கல் வெளியில் செல்ல வேண்டுமா? அதற்கு பாஸ் வாங்க வேண்டுமென்றால்… நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டும்… என்னவெல்லாம் தெரியுமா?!

ஹைதராபாதில் லாக்டௌன் சமயத்தில் வெளியில் செல்ல வேண்டும் என்று அவசியம் ஏற்பட்டால்.. தேவை ஏற்பட்டால்… இப்போதுவரை ஏதோ ஒரு சாக்கு சொல்லி உள்ளூரிலேயே திரிந்து வந்தார்கள் சிலர். ஆனால் லாக்டௌன் நிபந்தனைகளை மீறினால் தண்டனை கிடைத்தே தீரும் என்று ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனீ குமார் குமார் எச்சரித்துள்ளார்.

தற்போது ஸ்பெஷல் டிரைவ் கடைபிடிக்கப் போவதாகவும் ஒவ்வொரு வாகனத்தையும் பரிசோதனை செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிலர் போலீசார் கொடுத்த பாஸ்களை மிஸ்யூஸ் செய்கிறார்கள் என்றும் அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து பாஸ்களை ரத்து செய்வதோடு கூட வாகனங்களை சீஸ் செய்வோம் என்றும் கூறினார். இப்போதுவரை செக் போஸ்ட்களின் அருகில் நடந்த பரிசோதனைகள் மூலம் சுமார் 500 க்கும் மேலாக வாகனங்களை சீஸ் செய்துள்ளதாகக் கூறினார் சிபி.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!
epass application - 2026

உண்மையாகவே தேவை இருக்கும்போது அவர்கள் இனி ஆன்லைனில் பாஸ் பெற்றுக்கொள்ளலாம். அதற்காக போலீஸ் துறை பிரத்தியேக ஏற்பாடு செய்துள்ளது. அதற்காகவே பிரத்யேகமாக ஒரு வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பாஸை பெற வேண்டும் என்றால் முதலில் வீடியோவில் கூறியுள்ளபடி வெப்சைட்டுக்குள் சென்று அப்ளிகேஷன் ஃபார்மை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதன்பின் போட்டோ, ஆதார் கார்டு இணைக்க வேண்டும். அதனை முழுமையாக பரிசீலித்து பத்தே நிமிடங்களில் ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார் அப்ரூவ் செய்வார்கள். அது குறித்து நம் மொபைல் நம்பருக்கு மெசேஜ் ஆக வரும். அதன் பின்னர் லிங்க் ஓபன் செய்து பார்ம் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

முழு விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img