பிரபல உபய வேதாந்த பண்டிதர் கொடிசெர்ல பாண்டுரங்காசார்யுலு காலமானார்!

Published:

andhra veda pandit

பிரபல உபய வேதாந்த பண்டிதர் கொடிசெர்ல பாண்டுரங்காசார்யுலு (102) ஹைதராபாதில் திங்கட்கிழமை மாலை காலமானார்.

அவர் வேத சாஸ்திரத்தில் நிபுணர். சம்ஸ்கிருத சாகித்தியத்தில் அறிஞர். கிருஷ்ண யஜுர் வேதத்தில் கனாபாடியாக மிகப் பெரும் புகழ் பெற்றவர். அவர் வெமுலவாடா என்ற நகரில் நீண்ட காலம் முன்பு சம்ஸ்கிருத வேத உபன்யாசகராக பணியில் இருந்தார்.

மகபூப் நகரைச் சேர்ந்த இவர் சுமார் 20 ஆண்டுகள் மைசூரைச் சேர்ந்த பரகால மடத்தின் 33வது ஜீயர் ஸ்வாமி ஸ்ரீ அபிநவ ரங்கநாத பிரம்ம தந்திர ஸ்வதந்த்ர ஜீயர் சுவாமியிடம் வேத சாஸ்திரம் அத்யயனம் செய்துள்ளார்.

பாண்டுரங்காச்சார்யுலு மரணம் குறித்து தெலங்காணா முதல்வர் கேசிஆர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அவருடைய குடும்ப அங்கத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரியச் செய்தார்.

வேமுலவாடாவைச்சேர்ந்த சம்ஸ்கிருத பண்டிதர்கள் அஷ்டாவதானி திகள்ள ஶ்ரீஹரிசர்மா, நமிலகொண்ட ஹரிப்ரசாத், ராஜன்னா, கோட்டன்னா, ஶ்ரீனிவாஸ் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img