spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகொரோனா சிகிச்சைக்கு அண்டை மாநில மருத்துவமனைகளை நாடும் ஆந்திர விஐபி.,கள்!

கொரோனா சிகிச்சைக்கு அண்டை மாநில மருத்துவமனைகளை நாடும் ஆந்திர விஐபி.,கள்!

- Advertisement -

கரோனா வைரஸ் தாக்கினால் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பக்கத்து மாநில மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறும் விஐபிகள்.

கொரோனா வைரஸ் ஆந்திரப்பிரதேச அரசாங்க அதிகாரிகளுக்கு பெரிய பரிட்சை வைத்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் கட்டுப்பாடு, சிகிச்சை விஷயத்தில் தாம் முதலில் நிற்கிறோம் என்று கூறிக் கொள்வதற்கு பெருமுயற்சி செய்துவந்தது ஆந்திர பிரதேச அரசாங்கம்.

ஆனால் அவர்களுடைய முயற்சிக்கு பெரிய பரீட்சை தோன்றியுள்ளது. அதே அரசாங்கம் மற்றும் கட்சியில் உள்ள முக்கியமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அவர்களுக்கு வைரஸ் தாக்கியதில் ஆச்சரியமோ அரசாங்கத்தின் அலட்சியமோ காரணம் இல்லாமல் போகலாம்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால்… அந்த விஐபிக்கள் வைரஸ் தாக்கிய உடனே தம் சொந்த மாநிலமான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தம் சொந்த அரசாங்கத்தின் ஏற்பாடுகளை நம்பாமல் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்கள்.

ஆந்திராவில் கொரோனா வைரஸ் தாக்கிய பல ஒய்எஸ்ஆர் கட்சி பிரமுகர்கள் தம் சொந்த மாநிலம், சொந்த அரசை நம்பாமல் பக்கத்து மாநிலங்களுக்கு ஓடி உள்ளார்கள். அவர்களில் முக்கியமான பெயர் ஒய்எஸ்ஆர் கட்சியின் ராஜ்ய சபை அங்கத்தினர் வேணும்பாக்க விஜயசாயி ரெட்டி.

அரசாங்கத்தில் ஒய்எஸ்ஆர் பார்ட்டியில் ஜெகனுக்கு அடுத்து அதிகம் காதில் விழும் இரண்டு மூன்று பெயர்களில் முதலில் வரும் பெயர் விஜயசாயி ரெட்டியுடையதே.

அப்படிப்பட்ட அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கிய உடனே அவர் சிகிச்சைக்காக ஹைதராபாத் வந்துள்ளார். அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். உண்மையில் அவர் மருத்துவமனையில் சேர்ந்த முதல் நாளே இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.

அதற்கு காரணம் சில நாட்கள் முன்பு விஜயசாயி ரெட்டி, தெலுகு தேசம் கட்சி த் தலைவர் அச்சந்நாயுடு விஷயத்தில் கேட்ட கேள்விகளும் போட்ட டிவிட்டுகளுமே.

தெலுங்கு தேசம் தலைவர் முன்னாள் அமைச்சர் அச்சந்நாயுடு அரெஸ்ட் ஆன போது அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று டிமாண்ட் செய்தபோது அதற்கு கவுண்டர் அளிக்கையில், ‘பாராங்கல் போல உள்ள உனக்கு கார்ப்பரேட் மருத்துவமனை எதற்கு?’ என்று கேட்டு டிவிட்டு செய்தார் விஜய்சாயி ரெட்டி.

அதன் பின் 10 நாட்களுக்குள் விஜயசாயி ரெட்டி க்கு கொரோனா வைரஸ் நோய் பரவியது. உடனே அவர் கார்ப்பரேட் மருத்துவமனையில் சென்று சேர்ந்தார். அது கூட தன் சொந்த மாநிலத்தை விட்டு விட்டு பக்கத்து மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தார்.

அதன் பொருள் அவர் தன் சொந்தம் அரசாங்க ஏற்பாடுகளை நம்பவில்லை என்பதே அல்லவா… என்ற தோரணையில் சோசியல் மீடியாவில் பரபரப்பாக சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. இது விஜயசாயி ரெட்டி ஒருவருக்கு மட்டுமே அல்ல… ஏபி யிலிருந்து பலர் இதே வழியைப் பின்பற்றுகிறார்கள்.

விஜயசாயி ரெட்டியை விட முன்பே வைரஸ் பாதித்த ஆந்திர பிரதேசம் துணை முதல்வர் கடப்பாவைச் சேர்ந்த அம்ஜத் பாஷா தானாகவே ஹைதராபாத் கார்ப்போரேட் மருத்துவமனையில் சிகிச்சை செய்துகொண்டு திரும்பினார். மற்றும் ஒரு துணை முதல்வர் நாராயணசுவாமியின் மனைவிகூட கோவிட் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு கார்ப்பரேட் மருத்துவமனைகள் சென்று சேர்ந்தார்.

தெலங்காணாவிலும் தலைவர்கள் கொரோனா பரவியபோது அரசாங்க மருத்துவமனையில் சேராமல் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள். காந்தி மருத்துவமனையை அன்றி தமக்குப் பிடித்த பிரைவேட் மருத்துவமனைகளுக்கு சென்று சேர்ந்துள்ளார்கள்.

தெலங்காணாவில் இதுபோல் நடக்கும்போது ஆந்திராவில் நடப்பது பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை என்று கூறுவதற்கும் இல்லை. ஏனென்றால் தெலங்காணா தலைவர்கள் பிரைவேட் மருத்துவமனைகளில் சென்றாலும் தம் மாநிலத்திலேயே சென்றார்கள். ஆனால் ஏபி அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள் மாநிலத்தை விட்டு விட்டு பிற மாநிலங்களுக்குச் சென்று உள்ளார்கள்.

அதுமட்டுமல்ல… நெல்லூர் மாவட்டம் சூலூர் பேட்டை எம்எல்ஏ சஞ்சீவய்யா கூட முதலில் உள்ளூரிலேயே சிகிச்சை பெற்று வந்தாலும் பின்னர் சென்னையில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆனார். ஸ்ரீசைலம் எம்எல்ஏ ஷில்பா சக்ரபாணி ரெட்டி, கர்னூலைச் சேர்ந்த எம்எல்ஏ கங்குல பிரபாகர் ரெட்டி தற்போது ஹைதராபாத் கார்ப்போரேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe