கொரோனா சிகிச்சைக்கு அண்டை மாநில மருத்துவமனைகளை நாடும் ஆந்திர விஐபி.,கள்!

carona treatment andhra - 2026

கரோனா வைரஸ் தாக்கினால் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பக்கத்து மாநில மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறும் விஐபிகள்.

கொரோனா வைரஸ் ஆந்திரப்பிரதேச அரசாங்க அதிகாரிகளுக்கு பெரிய பரிட்சை வைத்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் கட்டுப்பாடு, சிகிச்சை விஷயத்தில் தாம் முதலில் நிற்கிறோம் என்று கூறிக் கொள்வதற்கு பெருமுயற்சி செய்துவந்தது ஆந்திர பிரதேச அரசாங்கம்.

ஆனால் அவர்களுடைய முயற்சிக்கு பெரிய பரீட்சை தோன்றியுள்ளது. அதே அரசாங்கம் மற்றும் கட்சியில் உள்ள முக்கியமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அவர்களுக்கு வைரஸ் தாக்கியதில் ஆச்சரியமோ அரசாங்கத்தின் அலட்சியமோ காரணம் இல்லாமல் போகலாம்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால்… அந்த விஐபிக்கள் வைரஸ் தாக்கிய உடனே தம் சொந்த மாநிலமான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தம் சொந்த அரசாங்கத்தின் ஏற்பாடுகளை நம்பாமல் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்கள்.

ஆந்திராவில் கொரோனா வைரஸ் தாக்கிய பல ஒய்எஸ்ஆர் கட்சி பிரமுகர்கள் தம் சொந்த மாநிலம், சொந்த அரசை நம்பாமல் பக்கத்து மாநிலங்களுக்கு ஓடி உள்ளார்கள். அவர்களில் முக்கியமான பெயர் ஒய்எஸ்ஆர் கட்சியின் ராஜ்ய சபை அங்கத்தினர் வேணும்பாக்க விஜயசாயி ரெட்டி.

அரசாங்கத்தில் ஒய்எஸ்ஆர் பார்ட்டியில் ஜெகனுக்கு அடுத்து அதிகம் காதில் விழும் இரண்டு மூன்று பெயர்களில் முதலில் வரும் பெயர் விஜயசாயி ரெட்டியுடையதே.

அப்படிப்பட்ட அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கிய உடனே அவர் சிகிச்சைக்காக ஹைதராபாத் வந்துள்ளார். அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். உண்மையில் அவர் மருத்துவமனையில் சேர்ந்த முதல் நாளே இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.

அதற்கு காரணம் சில நாட்கள் முன்பு விஜயசாயி ரெட்டி, தெலுகு தேசம் கட்சி த் தலைவர் அச்சந்நாயுடு விஷயத்தில் கேட்ட கேள்விகளும் போட்ட டிவிட்டுகளுமே.

தெலுங்கு தேசம் தலைவர் முன்னாள் அமைச்சர் அச்சந்நாயுடு அரெஸ்ட் ஆன போது அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று டிமாண்ட் செய்தபோது அதற்கு கவுண்டர் அளிக்கையில், ‘பாராங்கல் போல உள்ள உனக்கு கார்ப்பரேட் மருத்துவமனை எதற்கு?’ என்று கேட்டு டிவிட்டு செய்தார் விஜய்சாயி ரெட்டி.

அதன் பின் 10 நாட்களுக்குள் விஜயசாயி ரெட்டி க்கு கொரோனா வைரஸ் நோய் பரவியது. உடனே அவர் கார்ப்பரேட் மருத்துவமனையில் சென்று சேர்ந்தார். அது கூட தன் சொந்த மாநிலத்தை விட்டு விட்டு பக்கத்து மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தார்.

அதன் பொருள் அவர் தன் சொந்தம் அரசாங்க ஏற்பாடுகளை நம்பவில்லை என்பதே அல்லவா… என்ற தோரணையில் சோசியல் மீடியாவில் பரபரப்பாக சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. இது விஜயசாயி ரெட்டி ஒருவருக்கு மட்டுமே அல்ல… ஏபி யிலிருந்து பலர் இதே வழியைப் பின்பற்றுகிறார்கள்.

விஜயசாயி ரெட்டியை விட முன்பே வைரஸ் பாதித்த ஆந்திர பிரதேசம் துணை முதல்வர் கடப்பாவைச் சேர்ந்த அம்ஜத் பாஷா தானாகவே ஹைதராபாத் கார்ப்போரேட் மருத்துவமனையில் சிகிச்சை செய்துகொண்டு திரும்பினார். மற்றும் ஒரு துணை முதல்வர் நாராயணசுவாமியின் மனைவிகூட கோவிட் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு கார்ப்பரேட் மருத்துவமனைகள் சென்று சேர்ந்தார்.

தெலங்காணாவிலும் தலைவர்கள் கொரோனா பரவியபோது அரசாங்க மருத்துவமனையில் சேராமல் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள். காந்தி மருத்துவமனையை அன்றி தமக்குப் பிடித்த பிரைவேட் மருத்துவமனைகளுக்கு சென்று சேர்ந்துள்ளார்கள்.

தெலங்காணாவில் இதுபோல் நடக்கும்போது ஆந்திராவில் நடப்பது பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை என்று கூறுவதற்கும் இல்லை. ஏனென்றால் தெலங்காணா தலைவர்கள் பிரைவேட் மருத்துவமனைகளில் சென்றாலும் தம் மாநிலத்திலேயே சென்றார்கள். ஆனால் ஏபி அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள் மாநிலத்தை விட்டு விட்டு பிற மாநிலங்களுக்குச் சென்று உள்ளார்கள்.

அதுமட்டுமல்ல… நெல்லூர் மாவட்டம் சூலூர் பேட்டை எம்எல்ஏ சஞ்சீவய்யா கூட முதலில் உள்ளூரிலேயே சிகிச்சை பெற்று வந்தாலும் பின்னர் சென்னையில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆனார். ஸ்ரீசைலம் எம்எல்ஏ ஷில்பா சக்ரபாணி ரெட்டி, கர்னூலைச் சேர்ந்த எம்எல்ஏ கங்குல பிரபாகர் ரெட்டி தற்போது ஹைதராபாத் கார்ப்போரேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories