- கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவுக்கு மாரடைப்பு.
- அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்.
கபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு வெள்ளிக்கிழமை விடியற்காலை திடீரென இதய வலி ஏற்பட்டது. டெல்லியில் ஓக்லா ரோடில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் கிரிக்கெட் திக்கஜம் கபில் தேவுக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள்.
கபில்தேவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது என்று தெரிந்தவுடன் செலிபிரிடிகளோடு சேர்ந்து நெட்டிசன்கள் கவலை அடைந்து வருகிறார்கள். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பை வாங்கித்தந்த கிரிக்கெட் வீரர் கபில்தேவ் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டுமென்ற விருப்பத்தோடு ட்விட் செய்துள்ளார்கள்.
கபில் தேவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளது. கபில் தேவுக்கு இதயவலி ஏற்பட்டதில் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளார்கள்.
தற்போது அவர் உடல்நலம் நிலையாக இருப்பதாக கூறப்படுகிறது. ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கபில்தேவுக்கு நள்ளிரவில் டாக்டர் அதுல் மாத்தூர் அறுவைசிகிச்சை செய்ததாக கூறியுள்ளனர். தற்போது ஐசியுவில் கண்காணிப்பபில் இருக்கிறார். ஓரிரு நாட்களில் டிச்சார்ஜ் ஆகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
1983ல் இந்தியாவுக்கு ஒன்டே உலகக் கோப்பை வாங்கிக் கொடுத்தார் கேப்டன் கபில்தேவ். அவர் 16 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை அளித்துள்ளார். 131 டெஸ்டுகள் 225 ஒருநாள் கேம் டீம் இந்தியாவுக்காக கபில்தேவ் விளையாடியுள்ளார்.
கபில் தேவுக்கு டயாபட்டீஸ் போன்ற பிரச்னைகள் இருப்பதாக செலிபிரிடிகள் போஸ்ட் செய்துள்ளார்கள்.