ஊத்தங்கரை அருகே கடையில் தீ: ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசம்!

fire-accident-in-krishnagiri-dt2
fire-accident-in-krishnagiri-dt2

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி என்ற இடத்தில் பட்டாசுக் கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்தத் தீ விபத்தில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாயின.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி குன்னத்தூர் ரோட்டில் கமல்பாஷா பட்டாசுக் கடை இயக்கி வருகிறது. கடையின் உரிமையாளர் ரிஷ்வான் பாஷா (28) தற்போது தீபாவளிக்காக சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக வைத்துள்ளார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று காலை 8 மணியளவில் திடீரென கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த வெடிச்சிதறல் சத்தம், சுற்று வட்டாரப் பகுதிகளில் எதிரொலித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் பதறி அடித்து இந்த இடத்தில் கூடியுள்ளனர். அப்போது பட்டாசுகள் சாலையிலும் வெடித்துச் சிதறியுள்ளன.

fire-accident-in-krishnagiri-dt
fire-accident-in-krishnagiri-dt

உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். சுமார் அரைமணி நேரமாக இந்த பட்டாசுகள் வெடித்துள்ளனவாம்.

வெடி விபத்துக்குக் காரணம் மின் கசிவா அல்லது வெப்பம் தாங்காமல் பட்டாசுகள் வெடித்தனவா என்பது குறித்து சாமல்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

fire-accident-in-krishnagiri-dt3
fire-accident-in-krishnagiri-dt3

இந்த பட்டாசுக் கடையின் உரிமையாளரே, பட்டாசு தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு இதே பகுதியில் நடந்த பட்டாசு விபத்தில் கடை உரிமையாளரின் உறவினர் ஒருவர் உயிரிழந்தார். அவரது பட்டாசு குடோன் பகுதி உள்ள பெரிய ஜோகிப்பட்டியில் 2019ஆம் ஆண்டு நடந்த பட்டாசு விபத்தில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூவர் உயிரிழந்தனர். இப்படி தொடர்ந்து இந்தப் பகுதியில் பட்டாசு வெடிவிபத்து நடப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories