கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு… அறுவை சிகிச்சை!

Published:

kapildev
kapildev
  • கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவுக்கு மாரடைப்பு.
  • அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்.

கபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு வெள்ளிக்கிழமை விடியற்காலை திடீரென இதய வலி ஏற்பட்டது. டெல்லியில் ஓக்லா ரோடில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் கிரிக்கெட் திக்கஜம் கபில் தேவுக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள்.

கபில்தேவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது என்று தெரிந்தவுடன் செலிபிரிடிகளோடு சேர்ந்து நெட்டிசன்கள் கவலை அடைந்து வருகிறார்கள். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பை வாங்கித்தந்த கிரிக்கெட் வீரர் கபில்தேவ் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டுமென்ற விருப்பத்தோடு ட்விட் செய்துள்ளார்கள்.

கபில் தேவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளது. கபில் தேவுக்கு இதயவலி ஏற்பட்டதில் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளார்கள்.

தற்போது அவர் உடல்நலம் நிலையாக இருப்பதாக கூறப்படுகிறது. ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கபில்தேவுக்கு நள்ளிரவில் டாக்டர் அதுல் மாத்தூர் அறுவைசிகிச்சை செய்ததாக கூறியுள்ளனர். தற்போது ஐசியுவில் கண்காணிப்பபில் இருக்கிறார். ஓரிரு நாட்களில் டிச்சார்ஜ் ஆகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

1983ல் இந்தியாவுக்கு ஒன்டே உலகக் கோப்பை வாங்கிக் கொடுத்தார் கேப்டன் கபில்தேவ். அவர் 16 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை அளித்துள்ளார். 131 டெஸ்டுகள் 225 ஒருநாள் கேம் டீம் இந்தியாவுக்காக கபில்தேவ் விளையாடியுள்ளார்.

கபில் தேவுக்கு டயாபட்டீஸ் போன்ற பிரச்னைகள் இருப்பதாக செலிபிரிடிகள் போஸ்ட் செய்துள்ளார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img