December 7, 2025, 11:54 AM
26 C
Chennai

சிறந்த மருத்துவரைக் கொன்று போட்ட… ஊடகம், அரசியல்வாதி, போலிஸ் கூட்டணி!

dr archana sharma - 2025

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா சர்மா தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கே பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், மருத்துவர் அர்ச்சனா மீது ராஜஸ்தான் போலீசார் ஐ.பி.சி., 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அர்ச்சனா மார்ச் 29 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார். அதில், எனது கணவரையும், குழந்தைகளையும் நான் மிகவும் நேசிக்கிறேன். என் மரணத்திற்கு பின் அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. யாரையும் கொல்லவில்லை. பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு என்பது அனைவரும் அறிந்த சிக்கல். எனது மரணம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கக்கூடும். அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள். அம்மா இல்லாத குறையை குழந்தைகளுக்கு உணரவிடாதீர்கள்.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது இந்தக் கடிதம் சமூக ஊடகங்களில் பரவி ராஜஸ்தானில் பெரும் பிரச்னை ஆகியுள்ளது. வழக்கை தவறாகக் கையாண்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவுசா மாவட்ட எஸ்.பி., இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

இதனிடையே சமூகத் தளங்களில் தாதாத்தனம் செய்யும் அரசியல்வாதிகளையும் அவர்களுக்கு உடந்தையாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு அதிகாரபூர்வமாக குற்றம் செய்யும் ‘லைசன்ஸ்ட் கிரிமினல்’ போலிசாரையும் கண்டித்து கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. டாக்டர் அர்ச்சனா சர்மாவை போலிசாரும் ஊடகங்களும் தாதா அரசியல்வாதிகளும் சேர்ந்து கொன்று விட்டனர் என்று கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ஊடகங்களின் ஒருதலைப்பட்ச தீர்ப்பால், ஒரு சிறந்த மருத்துவரை நாடு இழந்துவிட்டதாக பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். #Justice_For_Dr_Archana என்ற டிவிட்டர் ஹேஷ்டேக் பிரபலம் அடைந்தது.

சிறந்த பெண் மருத்துவரை நாடு இழந்து விட்டது. போலிஸ் உடன் அதிகாரம் பொது வெளியில் மட்டும் தான். தான் நேரில் பார்க்காத, மருத்துவ முறை பற்றி சிறிதும் அறியாத போலீசார், ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் கொலை குற்ற வழக்கு பதிவு மிகுந்த ஆபத்தானது. சேவை செய்ய மருத்துவர் அஞ்சுவர். அரசு மருத்துவமனையில் இறந்தால் இப்படி கொலை வழக்கு பதிவு செய்ய முடியுமா? SP சஸ்பெண்ட், ஆய்வாளர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். உறவினர்கள் அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்.

மாமூல்? மற்ற வணிகர்களை மிரட்டி மாமூல் வசூலிப்பது போல இங்கும் மருத்துவமனை நடத்துபவர்களை மிரட்டி பணம் பறித்தல் நடக்கிறது. மாமூல் கொடுக்க மறுத்தால் இது போல பொய் குற்றம் சுமத்தி அடியாட்களை விட்டு போராட்டம் வழக்கு எனத்தூண்டி விட்டு மூடுவிழாவுக்கே ஏற்பாடு செய்து விடுகின்றனர். மரண வழக்கு வெளியில் தெரிந்தால் நோயாளிகள் வருகை குறைந்து விடுகிறது. ஸ்டெர்லைட்க்குப் பிறகு இது போன்ற தாதா வேலை மிகவும் அதிகரித்துள்ளது. நம்மிடம் டாக்டர் அதிகம் பிடுங்கி விடுவதாக புகார் அளிப்பவர்கள் அந்த கூடுதல் கட்டணத்தில் ஒரு பெரும் பகுதி அரசியல்வாதிகளுக்கு மிரட்டல் மூலம் மாமூலாக போவது தெரிவதில்லை. கடனாளியாகி மருத்துவமனையை அரசியல் தாதாக்களிடம் விற்று ஓடிய கதைகளும் உண்டு. இப்போதைய நிலையில் கார்பரேட் மருத்துவமனைகளைத் தவிர்த்து மற்ற மருத்துவமனைகள் நடத்தவே தடுமாறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

Topics

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Entertainment News

Popular Categories