spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சிறந்த மருத்துவரைக் கொன்று போட்ட... ஊடகம், அரசியல்வாதி, போலிஸ் கூட்டணி!

சிறந்த மருத்துவரைக் கொன்று போட்ட… ஊடகம், அரசியல்வாதி, போலிஸ் கூட்டணி!

- Advertisement -

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா சர்மா தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கே பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், மருத்துவர் அர்ச்சனா மீது ராஜஸ்தான் போலீசார் ஐ.பி.சி., 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அர்ச்சனா மார்ச் 29 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார். அதில், எனது கணவரையும், குழந்தைகளையும் நான் மிகவும் நேசிக்கிறேன். என் மரணத்திற்கு பின் அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. யாரையும் கொல்லவில்லை. பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு என்பது அனைவரும் அறிந்த சிக்கல். எனது மரணம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கக்கூடும். அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள். அம்மா இல்லாத குறையை குழந்தைகளுக்கு உணரவிடாதீர்கள்.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது இந்தக் கடிதம் சமூக ஊடகங்களில் பரவி ராஜஸ்தானில் பெரும் பிரச்னை ஆகியுள்ளது. வழக்கை தவறாகக் கையாண்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவுசா மாவட்ட எஸ்.பி., இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

இதனிடையே சமூகத் தளங்களில் தாதாத்தனம் செய்யும் அரசியல்வாதிகளையும் அவர்களுக்கு உடந்தையாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு அதிகாரபூர்வமாக குற்றம் செய்யும் ‘லைசன்ஸ்ட் கிரிமினல்’ போலிசாரையும் கண்டித்து கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. டாக்டர் அர்ச்சனா சர்மாவை போலிசாரும் ஊடகங்களும் தாதா அரசியல்வாதிகளும் சேர்ந்து கொன்று விட்டனர் என்று கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ஊடகங்களின் ஒருதலைப்பட்ச தீர்ப்பால், ஒரு சிறந்த மருத்துவரை நாடு இழந்துவிட்டதாக பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். #Justice_For_Dr_Archana என்ற டிவிட்டர் ஹேஷ்டேக் பிரபலம் அடைந்தது.

சிறந்த பெண் மருத்துவரை நாடு இழந்து விட்டது. போலிஸ் உடன் அதிகாரம் பொது வெளியில் மட்டும் தான். தான் நேரில் பார்க்காத, மருத்துவ முறை பற்றி சிறிதும் அறியாத போலீசார், ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் கொலை குற்ற வழக்கு பதிவு மிகுந்த ஆபத்தானது. சேவை செய்ய மருத்துவர் அஞ்சுவர். அரசு மருத்துவமனையில் இறந்தால் இப்படி கொலை வழக்கு பதிவு செய்ய முடியுமா? SP சஸ்பெண்ட், ஆய்வாளர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். உறவினர்கள் அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்.

மாமூல்? மற்ற வணிகர்களை மிரட்டி மாமூல் வசூலிப்பது போல இங்கும் மருத்துவமனை நடத்துபவர்களை மிரட்டி பணம் பறித்தல் நடக்கிறது. மாமூல் கொடுக்க மறுத்தால் இது போல பொய் குற்றம் சுமத்தி அடியாட்களை விட்டு போராட்டம் வழக்கு எனத்தூண்டி விட்டு மூடுவிழாவுக்கே ஏற்பாடு செய்து விடுகின்றனர். மரண வழக்கு வெளியில் தெரிந்தால் நோயாளிகள் வருகை குறைந்து விடுகிறது. ஸ்டெர்லைட்க்குப் பிறகு இது போன்ற தாதா வேலை மிகவும் அதிகரித்துள்ளது. நம்மிடம் டாக்டர் அதிகம் பிடுங்கி விடுவதாக புகார் அளிப்பவர்கள் அந்த கூடுதல் கட்டணத்தில் ஒரு பெரும் பகுதி அரசியல்வாதிகளுக்கு மிரட்டல் மூலம் மாமூலாக போவது தெரிவதில்லை. கடனாளியாகி மருத்துவமனையை அரசியல் தாதாக்களிடம் விற்று ஓடிய கதைகளும் உண்டு. இப்போதைய நிலையில் கார்பரேட் மருத்துவமனைகளைத் தவிர்த்து மற்ற மருத்துவமனைகள் நடத்தவே தடுமாறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe