பிரபல தெலுங்கு டிவி., சேனலின் செய்தி வாசிப்பாளர் ராதிகா ரெட்டி, ஞாயிற்றுக்கிழமை நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் வசித்து வந்த வீட்டின் 5-வது மடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தெரிவித்தனர்.
இறப்பதற்கு முன் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தாராம். அதில், தன் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என்றும், மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தனது மனம் தான் தனது எதிரி எனவும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார். ராதிகா ரெட்டியின் தற்கொலை குறித்து, ஹைதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.