உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்த இந்திய அணியினர்!

t20 world cup indian team met with pm narendra modiji - 2026

அண்மையில் நடைபெற்ற டி20 போட்டிகளில் பங்கேற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி வீரர்கள், பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 2024ம் ஆண்டுக்கான ‘டி-20’ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப் போட்டியில், இந்திய அணி, தென்ஆப்ரிக்க அணியை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து, ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

17 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். பிரதமர் மோடி, உடனடியாக இரவு வெகுநேரமென்றும் பாராமல், ஒரு வீடியோ வாழ்த்துச் செய்தி வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில், ஜூலை 4 இன்று காலை, வெற்றிக் கோப்பையுடன் தில்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் இந்திய அணி வீரர்கள் டி20 உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துவாழ்த்துப் பெற்றனர். வட்ட வடிவில் நாற்காலிகளைப் போட்டு அவர்கள் அனைவருடனும் பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் உரையாடி, அவர்களது அனுபவங்களையும் உணர்ச்சிகரமான தருணங்களையும் கேட்டு மகிழ்ந்தார். தொடர்ந்து வீரர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

முன்னதாக, உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் இறுதிப்போட்டியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையைப் பெறாமல் போனது. அப்போது நேரில் வந்திருந்து அணி வீரர்களை பிரதமர் மோடி ஆறுதல் படுத்தி, விரைவில் வெற்றி பெறுவீர்கள் என்று நம்பிக்கை அளித்துப் பேசினார். அதன் பின்னர் சுமார் ஏழு மாத இடைவெளியில், டி20 உலகக் கோப்பை வெற்றி வீரர்களாக இந்திய அணியினர் பிரதமர் மோடியைச் சந்தித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதன் பின்னர் இன்று மதியம் மும்பை வரும் இந்திய அணி வீரர்கள், மாலையில் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை, திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக (ரோடு ஷோ) செல்ல உள்ளனர். இது குறித்து ரோஹித் சர்மா தனது எக்ஸ் சமூகத் தளப் பக்கத்தில் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இன்று இரவில் வீரர்களுக்கு வான்கடே மைதானத்தில், அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. தொடர்ந்து, பி.சி.சி.ஐ., சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 125 கோடி பரிசுத் தொகை அணியினருக்கு வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories