மகரஜோதி தரிசனம்! பக்தர்கள் பரவசம்! சபரிமலையில் எதிரொலித்த சரணகோஷம்!

Published:

Makarajothi sabarimala - 2026

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் தெரிந்த மகரஜோதியை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர். அந்த நேரம், சபரிமலையில் சரணகோஷம் எதிரொலித்தது!

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. தினமும் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மகர விளக்கு பூஜையின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் திங்கள் கிழமை இன்று மாலை நடைபெற்றது.

முன்னதாக, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் மாலை 6.20க்கு சன்னிதானம் வந்தது. சபரிமலை தந்திரி ராஜீவரரு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் அதனைப் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் அரண்மனையில் இருந்து வந்த திருவாபரணங்கள், சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப் பட்டன. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.

இதன் பின்னர், மாலை 6.35 மணி அளவில் பொன்னம்பல மேட்டில் சுவாமி ஐய்ப்பன் ஜோதி வடிவில் 3 முறை காட்சி தரும் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என சரண கோஷம் முழங்க தரிசித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

Donate to Dhinasari News!

Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.

To make an instant donation, click on the “Donate Now” button above. For information regarding donation via Bank Transfer/Cheque/DD, click here.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img