கும்பமேளா தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் ஒன்றரை கோடி பேர் புனித நீராடியுள்ளனர்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் கும்பமேளா களை கட்டியுள்ளது.
இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி பக்தர்களும் சாதுக்களும் நேற்றிரவு சுமார் 11 லட்சம் தீபங்களை ஏற்றும் பணியைத் தொடங்கினர்.
சுமார் ஒரு மாத காலத்தில் 11 லட்சம் விளக்குகளை ஏற்ற இருப்பதாக தெரிவித்த பக்தர்கள் கும்பமேளா திருவிழா 50 நாட்கள் நடைபெறும் என்றும் அது முடிந்த உடன் ராமர் கோவில் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.