அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் விருப்பப்படும் இருக்கையைத் தேர்வு செய்து முன்பதிவு செய்துகொள்ள வசதியாக மொபைல் ஆப் இன்று தொடங்கப் பட்டுள்ளது.
இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் தொடங்கிவைத்தார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்து கழகங்களின் நெடுந்தூர பேருந்துகளில் பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்யும் வகையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செல்லிடைப் பேசி தனிச்செயலி (Mobile App) வழி முன்பதிவு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்தார்.