மு.க.ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமர்த்தப் போவதாகக் கூறி ரூ. 360 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப் பட்டதாகக் கூறப் படும், திமுக.,வின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் தமது பொலிடிகல் ஸ்ட்ராடஜி நிறுவனம் மூலம், பிரதமர் மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற வியூகங்களை வகுத்துக் கொடுத்து, கணிசமாக பணம் பெற்றார். இந்த நிலையில், இவர் மீது சாஸ்வத் கவுதம் என்பவர் மோதிகாரி காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் பாத் பீகார் கி என்னும் பெயரிலான தன்னுடைய கருத்துருவை பிரசாந்த் கிஷோர் திருடி பயன்படுத்திக் கொண்டார் என்று கூறியுள்ளார். இதை அடுத்து பிரசாந்த் கிஷோர் மீது, ஏமாற்றுதல், நம்பிக்கைத் துரோகம் செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாத் பீகார் கி என்பது பீகாரை நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதற்காக பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் இயக்கம்.