வரும் மார்ச் முதல் தினசரி இயக்கப்படும் கொல்லம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறித்து ரயில்வே உறுதி செய்துள்ளது.
ரயில் எண் 16101 / 16102 தினமும் கொல்லத்தில் இருந்து சென்னை, சென்னையில் இருந்து கொல்லம் என இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கொல்லத்தில் இருந்து புனலூர், செங்கோட்டை, விருதுநகர், திருச்சி வழியாக வரும் மார்ச் மாதம் இந்த ரயில்கள் இயங்குவதற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில்கள் சென்னை எழும்பூர் பிரிவு பராமரிக்கும். மார்ச் மாதம் என்று தகவல் தெரிவித்தாலும், தேதி இன்னும் உறுதிசெய்யப் படவில்லை.
முன்னர் சென்னையில் இருந்து கொல்லத்துக்கு கொல்லம் மெயில் சேவை இருந்து வந்தது. பழைய எண்களாக 101/102 என இருந்தது. மிகப் பாரம்பரியமான ரயில் சேவையாக ‘கொய்லன் மெயில்’ திகழ்ந்தது. தற்போது அகலரயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் சென்னை கொல்லம் மெயில் இப்போது எக்ஸ்ப்ரஸ்ஸாக உருவெடுத்திருப்பதாக பயணிகள் மகிழ்ச்சியுடன் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.