கோடநாடு விவகாரம் இத்தனை ஆண்டுகள் கழித்து தேர்தல் நேரத்தில் வெளிவந்திருப்பதில் ஏதோ சதி உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தாராவிளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடநாடு விவகாரத்தின் பின்னணியில் ஒரு பெரிய வலை பின்னப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தி.மு.க. சட்டமன்ற தேர்தலிலோ, நாடாளுமன்றத் தேர்தலிலோ வெற்றி பெற முடியாது என்றும், பஞ்சாயத்து தேர்தலிலாவது வெற்றி பெற மு.க.ஸ்டாலின் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி பயிற்சி எடுத்து வருவதாகவும் கிண்டல் செய்தார்.