ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் நெல்லை நேரடியாக விற்பனை செய்வதால் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
இதுகுறித்து பாவூர்சத்திரம் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜசேகர் கூறியதாவது
கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை இடைத்தரகர்கள் இன்றி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் மூலம் விற்பனை செய்து கொடுப்பதால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைகிறது ,இங்கு தென்காசி ,அம்பாசமுத்திரம் ,கல்லிடைகுறிச்சி உள்ளிட்ட பகுதி வியாபாரிகள் இங்கு நேரடியாக வந்து வாங்கிசெல்கின்றனர் மேலும் சரியான எடை ,அதிகபட்ச விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது மற்றும் விவசாயிகள் நெல்லை இங்குள்ள கிட்டங்கியில் இருப்பு வைத்து அதிக விலை வரும்போது விற்பனை செய்துகொள்ளும் வசதியும் உள்ளது மேலும் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் 5 சதவிகித பொருளீட்டுக்கடன்களும் வழங்கி வருகிறோம் என்றார்
இதுகுறித்து விவசாயி கருமடையூர் சண்முகையா கூறியதாவது
ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு சென்று விற்றதால் எனக்கு தரகர் கூலி இல்லை நல்ல ரேட் கிடைத்து வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து வாங்குவதால் எனக்கு அதிக லாபம் கிடைகிறது என்றார்
To Read this news article in other Bharathiya Languages
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல்லுக்கு கூடுதல்விலை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari