விற்பனைக்குழு உரிமம் இன்றி செயல்படும் அரிசி ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
பாவூர்சத்திரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது
தமிழ்நாடு விளைபொருள் விற்பனைச் சட்டம் 1987 பிரிவு (1) ன் படி நெல்,பருத்தி,மிளகாய் வத்தல் ,நிலக்கடலை,உளுந்து ,மல்லி,ஆகிய பொருட்களை வியாபாரம் செய்யும் பாவூர்சத்திரம் பகுதி வியாபாரிகள் ,அரிசி ஆலைகள் திருநெல்வேலி விற்பனைக்குழுவின் உரிமம் பெற்று வியாபாரம் செய்யவேண்டும் ,உரிமம் பெறாத ,புதுப்பிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் வணிகவரித்துறையில் உரிமம் பெற்ற மேற்கண்ட வியாபாரம் செய்பவர்கள் வணிக வரி உரிமத்துடன் விற்பனைகுழு உரிமமும் அவசியம் பெற வேண்டும்
மேற்கண்ட உரிமம் பெற்றவர்கள் மாதந்திர கணக்குகளை ஒப்படைக்காதவர்கள் கணக்குகளை வரும் ஜூலை 15 ம் தேதிகுள் சமர்பிக்க வேண்டும் தவறும் பட்சத்தில் அரசுக்கு வரி இழப்பை ஏற்ப்படுத்தும் வியாபாரிகள் ,அரிசி ஆலைகள் மீது நீதி மன்ற வழக்கு தொடரப்படுவதோடு அவர்களுடைய வருமான வரிகணக்குகள் மற்றும் வணிக வரி கணக்குகள் அத்துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டு கணக்குகள் முடக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
To Read this news article in other Bharathiya Languages
விற்பனைக்குழு உரிமம் இன்றி செய்தால் மீது கடும் நடவடிக்கை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari