வாட்ஸ் அப் : இன்று உலகமே இதில் தான் தகவல்களை பரிமாறிக் கொள்கிறது. வாட்ஸ் அப் இல்லாதவர்களோ, அதனை பயன்படுத்தாதவர்களோ இருக்க முடியாது. எல்லா செயலியைப் போல இதிலும் நன்மை தீமை உள்ளது.
தேவையில்லாத மெசஜஸ் செய்து நேரம் மற்றும் போனின் இடத்தை அடைப்பது போன்ற நிகழ்வுகள் ஏற்படும்.மேலும் நம் எண்ணை அறிந்த அதிகம் அறிமுகம் இல்லாத நபர் நம்மை ஒரு குரூபில் இணைப்பார்.
நமக்கு விருப்பமில்லாத வாட்ஸ் அப் குரூப்களில் இணைக்கப்படுவதைத் தடுக்க, புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது வாட்ஸ் அப். இந்த வசதியைச் சிலருக்கு மட்டுமே வழங்கி சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப். சோதனை முயற்சி வெற்றிபெற்றால் இந்த அப்டேட்டை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த புதிய வசதியின்படி வாட்ஸ் அப் குரூப்களில் நம்மை யாரெல்லாம் இணைக்கலாம் என்பதை நாமே தேர்வு செய்து கொள்ளும் வசதி இது. இந்த அப்டேட்டைப் பயன்படுத்த முதலில் அக்கவுன்ட் >பிரைவசி > குரூப் என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று (யாருமில்லை, என் தொடர்பாளர்கள் அல்லது எல்லோருக்கும்) ஆப்ஷனில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். Nobody(யாருமில்லை) என்கிற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால், குழுவில் உங்களையும் இணைக்கட்டுமா என்ற இன்வைட் மெசேஜ் வரும். விருப்பமிருந்தால் இணைந்துகொள்ளலாம். இல்லையெனில் தவிர்த்துவிடலாம்.
அந்த இன்வைட் மெசேஜ் மூன்று நாட்களில் காலாவதி ஆகிவிடும். My contacts(என் தொடர்பாளர்கள்) என்கிற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால் மொபைலில் எண்ணைப் பதிவு செய்து நம்மோடு contacts வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே நம்மை குரூப்களில் இணைக்க முடியும். Everyone(எல்லோருக்கும் ) என்கிற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால், யார் வேண்டுமானாலும் நம் அனுமதியின்றி குரூப்களில் இணைக்க முடியும்.