காஷ்மீரில் ‘கட்’ ஆன நேரத்தில் கிலானிக்கு கனெக்சன்: பிஎஸ்என்எல் அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்!

hurriet conference syed alisha geelani - 2026

காஷ்மீரில் இருந்து கொண்டு செயல்பட்டு வரும் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு சலுகை காட்டிய இரண்டு பிஎஸ்என்எல் அதிகாரிகளை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. முன்னதாக சையது அலிஷா கிலானிக்கு காஷ்மீரில் கட் செய்யப் பட்டிருந்த நேரத்தில் நான்கு நாட்களுக்கு இணைய இணைப்பு வழங்கப் பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

காஷ்மீர் முழு பள்ளத்தாக்கும் கட்டுப் படுத்தப் பட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தகவல்தொடர்பு இணைப்புகளும் ஒரு வாரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்டபோது, ​​ஹுரியத் தலைவர் கிலானி தனது கணக்கிலிருந்து ட்வீட் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான ஆக.5 ஆம் தேதி மத்திய அரசின் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதாக, ஆக. 4ம் தேதியே காஷ்மீர் முழுவதும் லேண்ட்லைன் உட்பட அனைத்து தகவல்தொடர்பு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் முதல்வர்கள், ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி மற்றும் பாரூக் அப்துல்லா ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்களுடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

இருப்பினும், கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானி ஆகஸ்ட் 8ம் தேதி காலை வரை லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் வசதியுடன் இருந்து வந்தார்.

கிலானி தனது தனிப்பட்ட கணக்கிலிருந்து ட்வீட் செய்யும் வரையில், காஷ்மீரில் அவர் இணைய இணைப்பைக் கொண்டிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை!

இதன் பின்னர், சில குறிப்பிட்ட டிவிட்டர் கணக்குகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெறுப்பை பரப்புவதாகக் கூறி, கிலானி உட்பட 8 பேரின் ட்விட்டர் கணக்குகளை முடக்கி வைக்குமாறு கோரி, மத்திய அரசும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் டிவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியது.

இணைய இணைப்பு வேறு எவரிடமும் இல்லாதபோது கிலானி மட்டும் இணையம் மற்றும் லேண்ட்லைன் கனெக்சனை எவ்வாறு பெற்றிருந்தார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக பி.எஸ்.என்.எல் உயர் அதிகாரிகள் இருவர் ஓட்டைகளைப் பயன்படுத்தி கிலானிக்கு கையாளாக வேலை பார்த்தது தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories