தகராறில் விஆர்ஓ., காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ.,! வேடிக்கை பார்த்த தாசில்தார்! காரணம் என்ன?!

Published:

vros ear bite - 2026

கர்னூல் மாவட்டத்தில் கிராம ரெவின்யூ அதிகாரியின் காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ.

கர்னூல் மாவட்டத்தில் இரு விஆர்ஓ.,க்களுக்கு இடையே தகராறூ ஏற்பட்டது. அப்போது ஒரு விஆர்ஓ இன்னோரு விஆர்ஓ.,வின் காதைக் கடித்துவிட்டார். கர்னூல் தாசில்தார் அலுவலகத்தில் இந்த சம்பவம் கடந்த ஞாயிறு மதியம் நடந்தது.

‘சுங்கேசுல’ கிராம ரெவின்யூ அதிகாரி வேணுகோபால் ரெட்டியும் ‘ஜோஹராபுரம்’ கிராம ரெவின்யூ அதிகாரி கிருஷ்ணதேவராயரும் பரஸ்பரம் அடித்துக் கொண்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.

வேணுகோபால் ரெட்டி கம்ப்யூட்டர் ஆபரேட்டராகவும் பணிபுரிந்து வருகிறார்.

ஒரு விவசாயியின் நிலம் தொடர்பான விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணதேவராயர் கேட்டுக் கொண்டார். பல நாட்களாக விவரங்களை அப்டேட் செய்யாமல் வேணுகோபால் ரெட்டி தங்களை மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்குகிறார் என்று குற்றம் சுமத்தினார். இந்த விஷயத்தில் எம்ஆர்ஓ முன்னிலையிலேயே கிராம ரெவின்யூ அதிகாரிகள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!
vao attack - 2026

ஆனால் தான் எப்போதோ அப்டேட் செய்து விட்டதாக வேணுகோபால்ரெட்டி கூறவே இருவரும் உடனுக்குடன் சிஸ்டத்தில் செக் செய்து பார்த்தபோது அதில் விவசாயியின் பெயர் தவறாக இருந்தது. அதனால் வேண்டுமென்றே அவ்வாறு செய்ததாக கிருஷ்ணதேவ ராயர் சந்தேகம் தெரிவித்தார்.

தாசில்தார் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் கேட்கவில்லை. கடுமையான அடிதடியில் ஈடுபட்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.

இது குறித்து… கிருஷ்ணதேவ ராயர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வேணுகோபால் ரெட்டி என் மீது செருப்பை வீசி எறிந்தார். அது என்னை தாக்கியது. அவர் முகம் என் அருகில் இருந்ததால் காதை கடித்து விட்டேன். எனக்கும் தான் தோளிலும் நெஞ்சிலும் அடிபட்டுள்ளது என்றார்.

வேணுகோபால் ரெட்டியின் காது பிய்ந்து ரத்தம் கொட்டியது. சண்டையிடுவது தங்கள் நோக்கம் அல்ல என்றும் விவசாயிகளுக்கு உதவுவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கிருஷ்ணதேவராயர் கூறினார்.

இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தார்கள்!

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img