-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
சுதந்திரத்திற்குப் பின்…
1948 முதல், ஐ.ஓ.ஏவின் பரந்த அளவிலான செயல்பாடு காரணமாக, இந்தியா பல விளையாட்டுகளை பிரதிநிதித்துவப் படுத்தும் 50 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களின் ஒரு அணியை கோடை ஒலிம்பிக்கிற்கு அனுப்பத் தொடங்கியது. தூதுக்குழுவிற்கு ஒரு செஃப்-டி-மிஷன் தலைமை தாங்கினார். இறுதிப் போட்டியில் கிரேட் பிரிட்டனை தோற்கடித்து இந்திய ஹாக்கி அணி 1948 கோடைகால ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றது. இது ஒரு சுதந்திர தேசமாக இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் ஆகும்.
1952 கோடைகால ஒலிம்பிக் மல்யுத்த வீரர் கே.டி. ஜாதவ் சுதந்திர இந்தியாவுக்கான முதல் தனிநபர் பதக்கத்தை வென்றார்.
1956 கோடைகால ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து ஆறாவது பதக்கம் வென்றதன் மூலம் இந்திய ஹாக்கி அணி தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்தது.
1960 கோடைகால ஒலிம்பிக்கில் ஹாக்கி அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
1964 கோடைகால ஒலிம்பிக்கில் ஹாக்கி அணி மீண்டும் தங்கம் வென்றது. ஆனால் அடுத்த இரண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வென்றது.
1976ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியா வெறுங்கையுடன் வீட்டிற்குச் சென்றது, இது 1924க்குப் பிறகு இது முதல் முறையாகும்.
1980 கோடைகால ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி 8 வது மற்றும் கடைசி தங்கப் பதக்கத்தை வென்றது. அடுத்த மூன்று கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியா வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருந்தது.
1996ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் டென்னிஸில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில், டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
சுதந்திரத்திற்குப் பிறகு பல தனிநபர் ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற பெருமையை சுஷில் குமார் பெற்றார்.
2000 சிட்னி ஒலிம்பிக்கில் இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி பெண்கள் 69 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது ஒரு இந்திய பெண் வென்ற முதல் ஒலிம்பிக் பதக்கம் ஆகும்.
2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் நட்சத்திர துப்பாக்கி சுடும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆண்கள் டபுள் டிராப் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர். 2014ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினரானார்; மோதி அவர்கள் அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில், ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அபிநவ் பிந்த்ரா தங்கம் வென்றார், ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். மிடில்வெயிட் பிரிவில் தனது வெண்கலப் பதக்கத்துடன் விஜேந்தர் சிங் குத்துச்சண்டையில் நாட்டின் முதல் பதக்கத்தைப் பெற்றார்.
2012 கோடைகால ஒலிம்பிக்கில் 83 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அணி விளையாட்டுகளில் பங்கேற்று மொத்தம் ஆறு பதக்கங்களுடன் நாட்டிற்கு ஒரு புதிய சிறப்பைத் தந்தது. மல்யுத்த வீரர் சுஷில் குமார், துப்பாக்கி சுடும் வீரர் விஜயகுமார் ஆகிய இருவரும் வெள்ளி பதக்கம் பெற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் பேட்மிண்டனில் வெண்கலப் சைனா நேவால், குத்துச் சண்டையில் மேரி கோம், துப்பாக்கி சுடுதலில் ககன் நரங், மல்யுத்தப் போட்டியில் யோகேஷ்வர் தத் ஆகியோர் வெண்கலப் பதக்கங்கள் பெற்றனர்.
2016 கோடைகால ஒலிம்பிக்கில், அதிக எண்ணிக்கையாக 118 விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர். மகளிர் ஃப்ரீஸ்டைல் 58 கிலோ பிரிவில் தனது வெண்கலப் பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீரர் என்ற பெருமையை சாக்ஷி மாலிக் பெற்றார். பேட்மிண்டன் வீராங்கனை பி. வி. சிந்து ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி மற்றும் இந்திய இளைய ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்ற சிறப்பையும் பெற்றார்.