ஒலிம்பிக் – ஹாக்கி தவிர பிற விளையாட்டுகளில் இந்தியா (2)

olympics - 2026

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

சுதந்திரத்திற்குப் பின்…

1948 முதல், ஐ.ஓ.ஏவின் பரந்த அளவிலான செயல்பாடு காரணமாக, இந்தியா பல விளையாட்டுகளை பிரதிநிதித்துவப் படுத்தும் 50 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களின் ஒரு அணியை கோடை ஒலிம்பிக்கிற்கு அனுப்பத் தொடங்கியது. தூதுக்குழுவிற்கு ஒரு செஃப்-டி-மிஷன் தலைமை தாங்கினார். இறுதிப் போட்டியில் கிரேட் பிரிட்டனை தோற்கடித்து இந்திய ஹாக்கி அணி 1948 கோடைகால ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றது. இது ஒரு சுதந்திர தேசமாக இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் ஆகும்.

1952 கோடைகால ஒலிம்பிக் மல்யுத்த வீரர் கே.டி. ஜாதவ் சுதந்திர இந்தியாவுக்கான முதல் தனிநபர் பதக்கத்தை வென்றார்.

1956 கோடைகால ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து ஆறாவது பதக்கம் வென்றதன் மூலம் இந்திய ஹாக்கி அணி தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்தது.

1960 கோடைகால ஒலிம்பிக்கில் ஹாக்கி அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

1964 கோடைகால ஒலிம்பிக்கில் ஹாக்கி அணி மீண்டும் தங்கம் வென்றது. ஆனால் அடுத்த இரண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வென்றது.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

1976ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியா வெறுங்கையுடன் வீட்டிற்குச் சென்றது, இது 1924க்குப் பிறகு இது முதல் முறையாகும்.

1980 கோடைகால ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி 8 வது மற்றும் கடைசி தங்கப் பதக்கத்தை வென்றது. அடுத்த மூன்று கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியா வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருந்தது.

1996ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் டென்னிஸில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில், டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

சுதந்திரத்திற்குப் பிறகு பல தனிநபர் ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற பெருமையை சுஷில் குமார் பெற்றார்.

2000 சிட்னி ஒலிம்பிக்கில் இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி பெண்கள் 69 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது ஒரு இந்திய பெண் வென்ற முதல் ஒலிம்பிக் பதக்கம் ஆகும்.

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் நட்சத்திர துப்பாக்கி சுடும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆண்கள் டபுள் டிராப் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர். 2014ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினரானார்; மோதி அவர்கள் அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில், ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அபிநவ் பிந்த்ரா தங்கம் வென்றார், ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். மிடில்வெயிட் பிரிவில் தனது வெண்கலப் பதக்கத்துடன் விஜேந்தர் சிங் குத்துச்சண்டையில் நாட்டின் முதல் பதக்கத்தைப் பெற்றார்.

2012 கோடைகால ஒலிம்பிக்கில் 83 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அணி விளையாட்டுகளில் பங்கேற்று மொத்தம் ஆறு பதக்கங்களுடன் நாட்டிற்கு ஒரு புதிய சிறப்பைத் தந்தது. மல்யுத்த வீரர் சுஷில் குமார், துப்பாக்கி சுடும் வீரர் விஜயகுமார் ஆகிய இருவரும் வெள்ளி பதக்கம் பெற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் பேட்மிண்டனில் வெண்கலப் சைனா நேவால், குத்துச் சண்டையில் மேரி கோம், துப்பாக்கி சுடுதலில் ககன் நரங், மல்யுத்தப் போட்டியில் யோகேஷ்வர் தத் ஆகியோர் வெண்கலப் பதக்கங்கள் பெற்றனர்.

2016 கோடைகால ஒலிம்பிக்கில், அதிக எண்ணிக்கையாக 118 விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர். மகளிர் ஃப்ரீஸ்டைல் 58 கிலோ பிரிவில் தனது வெண்கலப் பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீரர் என்ற பெருமையை சாக்ஷி மாலிக் பெற்றார். பேட்மிண்டன் வீராங்கனை பி. வி. சிந்து ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி மற்றும் இந்திய இளைய ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்ற சிறப்பையும் பெற்றார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories