குழந்தைகளை பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்க: ஆர்.பி. உதயகுமார்!

rb udayakumar
rb udayakumar

குழந்தைகளை பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் ஆர்‌.பி. உதயகுமார் பேசுகையில் கேட்டுக் கொண்டார்.

குழந்தைகளை பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்‌.பி. உதயகுமார் பேட்டியளித்தார்

மதுரை புறநகர் மேற்கு கழக மாவட்டம் ‌ பேரையூர் பேரூர் கழகத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்க்கு செயலாளர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை வழங்கினார்

மற்றும் இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன்,மாவட்டக் கழகப் பொருளாளர் திருப்பதி, ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி, பேரையூர் பேரூர் கழகச் செயலாளர் நெடுமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது…

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில். 1,98,000 கூடுதலாக வாக்கு பெற்று இருந்தால் 3 வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று ஹாட்ரிக் சாதனை படைத்திருப்போம்

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

சட்டமன்ற தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதி கொடுத்தது ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை மக்களின் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று அரசிடம் கேட்டால் அதை திசை திருப்பும் வண்ணம் நம் மீது வழக்கு போட்டு ஜனநாயக குரல் வளையை அரசு நெரிக்கிறது மக்கள் உரிமைக்காக நாம் போராடினால் வழக்கு என்றால் ஆயிரம் முறை மக்களுக்காக நாம் போராடுவோம்

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது அதில் அதிமுக தான் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் ஆகவே கடுமையாக களப்பணியாற்றி 100 சதவீதம் வெற்றியை கழகத்திற்கு ஈட்டி தந்து அதை நாம் கழகத்தின் பொன்விழா பரிசாக கழக ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்க வேண்டும் என்று பேசினார்

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள்யிடம் கூறியதாவது…

இந்தியாவில் 41 கோடி பேர் முகநூல் பயன்படுத்துகின்றனர், வாட்ஸ்அப்பை 53 கோடி பேர் பயன்படுத்துகின்றனர், யூடிப்பை 45 கோடி பேர் பயன்படுத்துகின்றனர், இன்ஸ்டாகிராமை 21 கோடி பேர் பயன்படுத்துகின்றனர், லிங்க்இன்னை 6.5 கோடி பேர் பயன் பயன்படுத்துகின்றனர், அமேசான் பிரேமை 4 கோடி பேர் பயன்படுத்துகின்றனர், டிவிட்டரை 1.75 கோடி பேர் பயன்படுத்துகின்றனர், நெட்பிக்ஸ் 30லட்சம் பயன்படுத்துகின்றனர் அந்தளவுக்கு இணையதள தொடர்ப்பு மக்களை ஊடுடவி உள்ளது

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

குறிப்பாக ‌‌‌‌‌17 கோடி பேர் டிக்டாக் செயலியில் இருந்தனர் மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டில் அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வந்த எடப்பாடியார் இதை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார் அதனைத் தொடர்ந்து மத்திய அரசு தடை செய்தது

மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இளைஞர்கள் தங்கள் பணத்தை இழந்து தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்டனர் அதனை கருத்தில் கொண்டு அப்போது அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வந்த எடப்பாடியார் அதனை தடை செய்தார்

அதேபோல் சிறுவர்கள் பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தாக உள்ளது என்று பெற்றோர்கள் புகார் கொடுத்ததின் பேரில் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் அதனை தொடர்ந்து பப்ஜி விளையாட்டு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை கடந்த ஆண்டு மத்திய அரசு தடை செய்தது

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தற்போது சிறுவர்களை பாதிக்கும் ப்ரீபயர் போன்ற ஆன் லைன் விளையாட்டு பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது ஆகவே இந்த ப்ரீபயர் போன்ற விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories