மதமாற்றம் செய்ய வந்த இஸ்லாமியர்களைத் தட்டிக் கேட்ட விவகாரத்தில், படுகொலை செய்யப் பட்ட பாமக., நிர்வாகி ராமலிங்கம் விவகாரத்தில் பல்வேறு கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அவற்றில் ஒருவர், தம் தரப்பு நியாயத்தை இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கருத்து வைரலாகப் பரவி வருகிறது. அது…
நான் திரும்பத் திரும்ப சொல்றதுதான்.. மதம் மாற்றிகளுக்கும், மத வெறியர்களுக்கும் நீங்கள் இந்து முன்னணியா, RSS ஆ.., பா.ஜ.க வா என்பது முக்கியமல்ல
அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டாம் கருத்துத் தெரிவித்தால் கூடப் போதும்… கோழைத்தனமாக முதுகில் வந்து தான் வெட்டுவான்கள், அல்லது, குண்டு வைத்துக் கொத்துக் கொத்தாகக் கொல்வார்கள்..!
அது நீங்கள் இவர்களை ஆதரிக்கும் தி.மு.க போன்ற கட்சியில் இருந்தாலும் சரி, அவர்களைப் பொருத்தவரை நாம் எல்லோருமே காஃபிர்கள் தான்..!
அவ்வளவு ஏன்.. கோவையில் அவர்களது சொந்த மதத்தைச் சேர்ந்தவனையே வெட்டிக் கொன்ற நல்லவர்கள் இவர்கள்..!
ஆனால், இவை எதையுமே புரிந்து கொள்ளக் கூட மறுக்கும் ஒரு முட்டாள்க் கூட்டத்தை இங்கே திராவிடம் வளர்த்து விட்டுள்ளது. ????????
அதிலும்.. வெளிப்படையாகவே, தங்களுடைய ஒவ்வொரு அசைவிலும் இந்தக் கொலைகாரர்களையும், மதம் மாற்றிகளையும் ஆதரிப்பதற்காக இந்துக்களை தொடர்ந்து அவமதிக்கும் தி.மு.க வை ஆதரிக்கும் இந்துக்களைப் பார்த்து நான் கோபப்படவில்லை… பரிதாபப்படுகிறேன்..!
இஸ்லாமியர்களுக்கு முரட்டுத்தனமாக முட்டுக் கொடுக்கும் திருமாவளவனைச் சார்ந்த இனத்தினரை தேனி பொம்மி நாயக்கன்பட்டியில், அதே இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து அடித்து நொறுக்கிய பொழுது தெரிந்திருக்கும் அவர்களுக்கு மதவெறி என்றால் என்னவென்று.
இதே, திண்டுக்கல் பெருமாள்கோவில்பட்டியில் இருபது வருடங்களாகக் கோவில் திருவிழாவை நடத்த விடாமல் கிறிஸ்தவர்கள் செய்யும் அட்டகாசங்கள் எத்தனை பேருக்குத் தெரியும்.?
இத்தனைக்கும் அந்த இந்துக்களில் பெரும்பாலானவர்கள் தி.மு.க ஆதாரவாளர்கள். ஆனால், அவர்களுக்குத் தெரியாது அவர்களின் எதிரியே தி.மு.க தான் என்று..!
இந்தியாவிலேயே, எண்ணிக்கையில் குறைவான சிறுபான்மையினரைக் கொண்ட மாநிலம் தமிழகம்தான். ஆனால், இங்கே தான் இவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகளும் தலைவர்களும் அதிகம்.
1998-ல் தி.மு.க ஆட்சியில் பிப்ரவரி 14-ந் தேதி கோவையில் குண்டு வைத்து 59 அப்பாவிகளைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற தீவிரவாதிகளுக்கு என்ன தண்டனை கிடைத்தது..?
அதைவிடக் கொடுமை அந்தத் தீவிரவாதிகளை ஆதரிக்கும் தி.மு.க வை அதற்குப் பிறகும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது தமிழர்களின் சாதனை..! ????
அன்று கூட, செய்திகள் சரிவர மக்களைச் சென்றடைய முடியாமல் இருந்தது. ஆனால், இன்று இத்தனை ஊடகங்கள் இருந்தும் கூட உண்மையான செய்திகள் மக்களைச் சென்றடைவதில்லை.
வெறும் வாக்குவாதத்திற்காக, இன்று ஒரு அப்பாவியைக் கொடூரமாக வெட்டிக் கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிப் பேசக் கூட ஆள் இல்லை.
கோவை குண்டுவெடிப்பு அல்லாமல் இதுவரை 21 அப்பாவிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், அதைப் பற்றி எந்த ஊடகமும் விவாதம் நடத்தியதில்லை.
ஆனால், எங்கோ இருக்கும் வட மாநிலத்தில் ஒரு ஜூனைட், ஒரு அத்லக் கொல்லப்பட்ட பொழுது.. இங்கே இருக்கும் ஊடகங்கள் ஒரு மாதம் ஒப்பாரி வைத்தன. விசாரணை முடிவில் அவர்கள் கொல்லப்பட்ட காரணம் வேறு என்று தீர்ப்பு வந்தது. ஆனால், அதைப் பற்றிய செய்தியைக் கூட இவர்கள் போடவில்லை.
இது போல பல சம்பவங்களை உதாரணம் சொல்லலாம்.. மொத்தத்தில் இங்கே, இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டால் கேட்பதற்கு நாதி இல்லை. அதைப் பற்றிய உணர்வே, நடுநிலை இந்துக்களுக்கு இல்லை.
இங்கே , தீவிர இந்துக்களாகிய நாங்கள் போராடுவது.. எங்கள் மதத்தை வளர்க்க அல்ல.. காப்பாற்ற – என்பதை எப்பொழுதுதான் புரிந்து கொள்வீர்கள்..?
வெறும் 15% கூட இல்லாமல் இருக்கும் பொழுதே இவர்கள் இப்படி என்றால்.. நாளை நமது பேரன், பேத்திகள் சுதந்திரமாக நமது தெருவில் இருக்கும் கோவிலில் கூட வழிபட முடியாது என்பது புரியவில்லை.
தயவு செய்து எதிர்கால சந்ததியினருக்குத் துரோகம் செய்யாதீர்கள். இந்து மத விரோதிகளைப் புறக்கணியுங்கள் இந்துக்களே..!
தேசப்பணியில் என்றும் –
ந.முத்துராமலிங்கம்