அப்ரூவர் ஆகிறார் இந்திராணி முகர்ஜி! சிக்கலில் சிதம்பரம் குடும்பம்!

indrani mukrejea - 2026

புது தில்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் என வகையாக சிக்கிக் கொண்டிருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா குறித்த வழக்கில், அந்நிறுவனத்தின் உரிமையாளரான இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் சிதமப்ரம் குடும்பத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணியும், அவரது கணவர் பீட்டரும் கைது செய்யப்பட்டனர். இந்திராணி முகர்ஜி தற்போது மும்பை பைகுலா சிறையில் பெண்களுக்கான சிறையில் காவலில் இருக்கிறார். தற்போது, மகள் கொலை தொடர்பான வழக்கை சந்தித்து வருகிறார் இந்திராணி முகர்ஜி.

இந்நிலையில் சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அப்ரூவராக விரும்புவதாகவும் இந்திராணி தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். இதையடுத்து பிப்.7 இன்று இந்திராணியை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்திராணி முகர்ஜி இன்று ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், அவர் ஐஎன் எக்ஸ் மீடியாவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் அப்ரூவராக மாற விரும்புவதாகக் கூறப்படுகிறது.

chidambaram karthi nalini - 2026

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக வெளிநாடு முதலீடுகள் பெறப்பட்டதாக 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிபிஐ, எப்ஐஆர் பதிவு செய்தது. இவ்வழக்கில் குற்றவாளிகளாக ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.

இதை அடுத்து இந்திராணியிடம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையின் போது, முறைகேடாக வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுத் தர கார்த்தி சிதம்பரம் தன்னிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக இந்திராணி கூறி இருந்தார். இது தொடர்பாக அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். இந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஏற்கெனவே முன்ஜாமின் பெற்றுள்ளனர். நீதிமன்றத்தின் தயவில் முன் ஜாமீன் நாட்களை நீட்டித்துக் கொண்டே சென்று வருகின்றனர். நீதிமன்றத்தின் தயவில் வெளிநாடுகளுக்கும் பறந்து போய் விளையாடி வருகிறார் கார்த்தி சிதம்பரம்.

தற்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறுவதாகக் கூறப் படுவதால், ப.சிதம்பரம் குடும்பத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories