‘ஒன்றேகால் பக்க நாளே’ட்டின் மார்ச் 1, 2019 சென்னை பிரசுரம்
நாளை முதல் சில நாட்களுக்கு தாம்பரம், சேலையூர் பகுதிகளில் கருப்பு வேட்டி, கழகக் கும்பல் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சுமோக்கள் சீறிப் பாயும். டோல் பூத் அலுவலர்கள் மண்டை பத்திரம்.
“அண்ணன் அபிநந்தனை எப்டியாவது மடக்கிப் போட்றணும். அவருக்கு 20 சீட் தரவும் நாங்கள் தயார். ஆக ஆக” என்பதே எங்கும் முழங்கும்.
“விகா, பாமக இழப்பை, அபியை இழுப்பதன் மூலம் ஸ்டாலின் சரி செய்வார்- ஷபீரின் குபீர் ரிப்போர்ட் எங்கும் கிடைக்கும்.
“யோவ், சுப. வீ, நாளைக்கு நீ லீவு போட்டுட்டு வேற எங்கனாச்சியும் போய்யா, அங்க வந்து அவரு அய்யரா, அய்யங்காரா ஆராச்சிலாம் பண்ண வேணாம்”- நாஸ்டி செட்டியாரிடம் தனிப்பட்ட வேண்டுகோள் வைக்கப்படும்.
தாம்பரம், சேலையூர் பகுதிகளில் டீக் கடை வைத்திருப்போர், சிறுதொழில் புரிவோர், பிரியாணிக் கடைகள் பத்திரம்! மாமூல், ஓசி சோறு வேண்டி சிசிடீவி காமெராக்களும் சேர்த்தே அடித்து நொறுக்கப்படும்.
கூட்ட நெரிசலில் ஆங்காங்கே ஆதரவு தேடி, அநாதையாய் ‘ஞே’ என்று அலையும் ஓரிரு மய்யனார்களும் இருக்கலாம்.
கெஜ்ரி, உதிரி, புதிரிகள் ஆங்காங்கே தென்படும்.
அபியை நேரில் பார்த்து வாழ்த்தி, மோடிஜியைத் திட்ட, அண்ணனும், தங்கையும் டெல்லியில் தனி விமானம் ஏறுவார்கள்.
ரஜினி அதிகாலை ஐந்து மணிக்கே வந்து, அபியை வாழ்த்தி, போட்டோ எடுத்துக்கொண்டு, தன் பண்ணை வீட்டுக்கு சர்ரென்று போய் விடுவாராம்.
அபிநந்தனுக்கு ₹50 லட்சம் ரொக்கம், சின்ன வீடு போன்றவற்றை எடப்ஸ்+ஓபிஎஸ் நண்பகலில் அறிவிப்பார்கள்.
‘பாராசூட் இல்லாமலேயே எப்படி தாண்டித் தாண்டிக் குதிப்பது?’ என்கிற தலைப்பில் சின்ன அய்யா அன்புமணி தனியே தெரு முக்கில் பேசிக் கொண்டிருப்பார். காதைப் போத்தியபடி அங்கிருந்து பா. ரஞ்சித் எனும் நபர் ஓடுவார்.
வீடு சேர்ந்தவுடன் அபி தன் கர்னல், கமாண்டர், பிரதமர் மோடி ஆகியோரோடு முறையே பேசுவார்.
‘மோடி ஏன் நெடுநேரம் அபியுடன் பேசிக்கொண்டே இருக்கவில்லை?’ – இரவு டீவி சேனல்கள் அலசும்.
- ராம் ராமச்சந்திரன்