இனி… விஜயவாடா கனகதுர்கா கோயில்லயும் வருது இந்தக் கட்டுப்பாடு..!

Published:

vijayawada kanakadurga - 2026

இந்த ஆண்டு உகாதிலிருந்து சம்பிரதாய உடை அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே விஜயவாடா கனகதுர்க்கை ஆலயப் பிரவேசம் அனுமதி.

விஜயவாடா இந்திரகீலாத்ரி மலை மீது கோவில் கொண்டுள்ள ஸ்ரீ கனக துர்கா மல்லேஸ்வர சுவாமி தேவஸ்தனம் கோவில் டிஸ்ட் கமிட்டி சேர்மன் பைலா சோமிநாயுடு, சனிக்கிழமை நடந்த கோவில் டிரஸ்ட் கமிட்டி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

துர்கா தேவி ஆலயத்தின் ஆன்மிகச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு இந்த தீர்மானம் எடுத்துள்ளதாக கூறினார். திருமலா திருப்பதி தேவஸ்தானம் போல ஆண்கள் வேட்டி அல்லது பேண்ட் அணிந்து வரவேண்டும். பெண்கள் புடவை அல்லது சல்வார் கமீஸ் டிரஸ் அணிந்து வரவேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாக கூறினார்.

2020 -21ல் ஆலய மேம்பாட்டுக்காக 178 கோடி ரூபாய் செலவழிக்க இருப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டு தசரா பண்டிகையை ஆலயத்தில் அரசு நிதியில் நடத்த போவதாக எம்எல்ஏ ராசமல்லு சிவபிரசாத் ரெட்டி தெரிவித்தார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img