பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக செங்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிட செண்பகவல்லி, தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் விருப்பமனு அளித்தார். அவருடன் பாஜக., நகர நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
அடுத்து, பாஜக., சார்பில் நகர்மன்ற தலைவராகப் போட்டியிட, மீனா சண்முகவேல் விருப்ப மனு அளித்தார். மாவட்ட பொதுச் செயலர் ராமராஜ், மாவட்ட துணை தலைவர் ராமநாதன், பாலகுரு, வழக்கறிஞர் கணேசன் கோமதிநாயகம் உள்ளிட்ட பலர் அப்போது உடன் இருந்தனர்.