சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தகவல் வெளியிட்டுள்ளார். இதனால், சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பில் கடும் குழப்பம் ஏற்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிப்பு வெளியாகி, அது அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் பிரதான செய்தியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் விடுமுறை அறிவிப்பு என எதுவும் இதுவரை தாம் அறிவிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து தகவல் வெளியானதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இதனால் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையா இல்லையா என்பது குறித்து மீண்டும் மீண்டும் மக்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.
இந்நிலையில், காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப் பட்ட நிலையில், சென்னையில் நாளை விடுமுறை அறிவிக்கப் படுவதாக பின்னர் வந்த அறிவிப்பில் ஆட்சியர் அறிவித்தார்.
கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை; அதீத கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என்று ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்தார்.
கன மழையால் சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் பட்டிருக்கின்றன. மழை காரணமாக நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டுள்ளதாக சென்னை பல்கலை கழகம் அறிவித்தது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
தொடர் கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப் படுவதாக ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு வெளியிட்டார்.
ராமநாதபுரம் – விடுமுறை: கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று – மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவிப்பு வெளியிட்டார்.
கனமழை- சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.