பூனை மீசை எனும் மூலிகைக்கும் சிறுநீரகச் கற்களைக் கரைக்கும் தன்மையுள்ளது. தவிர இது, ஆரம்பக்கட்ட சிறுநீரகப் புற்று நோயையும் குணமாக்குகிறது. இது, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னர், ஜாவா நாட்டில் இருந்து அலங்காரச் செடியாக நமது நாட்டுக்கு அறிமுகம் ஆனது. இதனுடைய பூக்கள், பூனை மீசை போன்றும் இலைகள் துளசி இலை போன்றும் இருப்பதால், இதைப் ‘பூனை மீசை துளசி’ என்னும் அழைக்கிறார்கள்.
இச்செடியை பச்சையாக ஒரு கைப்பிடியளவு (100 கிராம்) எடுத்து ஒன்றிரண்டாக இடித்தோ அல்லது அரைத்தோ 1 லிட்டர் தண்ணீரில் இட்டு 125 மில்லியாகச் சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். இக்குடிநீர், சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளுக்கு நல்ல மருந்து. இதன் வணிகப் பெயர், ‘ஜாவா டீ’. இதன் தண்டுகளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துப் பதியன் போட்டு செடிகளைப் பெருக்க முடியும்.
இதை மூலிகைக் குடிநீராக ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதாகச் சொல்கிறார்கள். இக்குடிநீரில் 35 வகையான வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அது குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மலேசியா நாட்டில், சிறுநீரகக் கல்லடைப்பு, பித்தப்பைக் கல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டுவாதம் போன்ற நோய்களைக் குணமாக்க பூனை மீசை பயன்படுத்தப்படுகிறது.
பூனை மீசை செடி
இது உடலின் உயிர் வேதியியல் நிகழ்வை (மெட்டபாலிசம்) வேகப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளதால், அதிகளவு கலோரிகளை எரித்து அதிக வியர்வையை வெளியேற்றும் தன்மை கொண்டுள்ளது.
இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும்
உகந்தது.
தினமும் பூனை மீசை தேநீர் அருந்துவது நல்ல பயனளிக்கும் .இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்யலாம்
பூனை மீசை மூலிகை வாத நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்குஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரமாக உள்ளது . மலேசியா, சீனா , இந்தோனேசிய ஜப்பானில் இது உடல் ஆரோக்கியத்துக்கான தேநீராக தினமும் அருந்தப்படுகிறது .
மேலும் இந்த மூலிகை சிறுநீர் பெருக்கியாக செயல் படுகிறது . தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது .
சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது, கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது, சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக கற்கள், கீல்வாதம், வாத நோய், மற்றும் பிற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை .
இது கிரீன் டீ போல தினசரி பயன்படுத்தலாம் நோய் இல்லாதவரும் பயன்படுத்தலாம் . இதை ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள் . தினசரி 2 வேலை பயன்படுத்துவதால் மேற்கண்ட அணைத்து நோய்களில் தாக்கத்தினை குறைக்கலாம்.
சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது , மேலும் கல்லீரல் கொழுப்பை கரைத்து அதன் திறனை அதிகபடுத்துகிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது.
இந்த டீ தயாரிக்க 1.1/2 தம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரில் 2 மேஜை கரண்டி அளவு மூலிகையை போட்டு (5கிராம் ), மூடி போட்டு மூடி வைக்க வேண்டும், பின் 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும் . சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேவை என்றால் தேன், பனைவெல்லம் சேர்த்து கொள்ளலாம் .
சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா ,கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் ..அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .
குற்றாலம் முதல் புனலூர் செல்லும் பாதையில் உள்ள இந்த பூனை மீசை மூலிகையே நன்றாக சிறுநீரக செயல் இழப்புக்கு நோயின் தன்மையைக் குறைக்கின்றது.
உடலில் உள்ள நச்சுக் கொழுப்புகள் மற்றும் உடலின் கெட்ட நீரை, கெடுதல் தரும் யூரியா உப்பை, சிறுநீரின் மூலம் வெளியேற்றி, அதன் மூலம் அதிகமாக உள்ள உடல் எடையைக் குறைக்கும் தன்மை மிக்கது, பூனைமீசை.
இரத்தத்தில் உள்ள கெட்ட நச்சுக்களை அழிப்பதில், பூனைமீசை சிறந்த பலன்கள் தரும். இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் எரிச்சல், புண்கள், நீர்க்கட்டிகள் போன்றவற்றை போக்கும்.