அன்காரா: சிரியாவில் இயங்கிவரும் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத இயக்கத்தில் சேர வேண்டும் என்று கூறிக் கொண்டு அங்கே செல்ல முயன்ற பிரிட்டிஷ் சிறுவர்கள் 3 பேர் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப் பட்டனர். ஞாயிற்றுக் கிழமை இன்று இது குறித்து தகவல் தெரிவித்த துருக்கி அதிகாரிகள், அவர்கள் மூவரின் பெயர்களை வெளியிடவில்லை. அவர்கள் மூவரையும் லண்டனுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், மூவரையும் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் இந்த வாரத்துக்குள் ஒப்படைத்து திருப்பி அனுப்பப் படுவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து முன்னதாக தகவல் தெரிவித்திருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், 17 வயதுடைய சிறுவர்கள் இருவர், சிரியாவுக்குச் செல்வது குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாகவும், அவர்கள் இருவருடன் 19 வயது நபர் ஒருவரும் செல்வதாகவும், அவர்களைத் தாங்கள் தேடியதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
To Read this news article in other Bharathiya Languages
ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற பிரிட்டிஷ் சிறுவர்கள் 3 பேர் மீட்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari