அன்காரா: சிரியாவில் இயங்கிவரும் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத இயக்கத்தில் சேர வேண்டும் என்று கூறிக் கொண்டு அங்கே செல்ல முயன்ற பிரிட்டிஷ் சிறுவர்கள் 3 பேர் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப் பட்டனர். ஞாயிற்றுக் கிழமை இன்று இது குறித்து தகவல் தெரிவித்த துருக்கி அதிகாரிகள், அவர்கள் மூவரின் பெயர்களை வெளியிடவில்லை. அவர்கள் மூவரையும் லண்டனுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், மூவரையும் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் இந்த வாரத்துக்குள் ஒப்படைத்து திருப்பி அனுப்பப் படுவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து முன்னதாக தகவல் தெரிவித்திருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், 17 வயதுடைய சிறுவர்கள் இருவர், சிரியாவுக்குச் செல்வது குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாகவும், அவர்கள் இருவருடன் 19 வயது நபர் ஒருவரும் செல்வதாகவும், அவர்களைத் தாங்கள் தேடியதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற பிரிட்டிஷ் சிறுவர்கள் 3 பேர் மீட்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

