டிராபிக் ராமசாமிக்கு டிவிட்டரில் பெருகும் ஆதரவு

Published:

traffic-ramasamy சென்னை: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஆதரவுக் குரல் பெருகிவருகிறது. இதற்காக, #WeStandWithTrafficRamasamy என ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. ஞாயிறு இன்று மதியம் தொடங்கி சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிராபிக் ராமசாமி மீதான நடவடிக்கையை விமர்சித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். அவரது சமூக ஆர்வ செயல்பாடுகளை நினைகூர்ந்து வருகின்றனர். முன்னதாக, காரை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி ஹோட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட டிராபிக் ராமசாமி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் பின்னர் பல்நோக்கி சிறப்பு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே அதிகாலையில் கைது செய்து இவரை சிறையில் அடைத்ததற்கான நியாயமான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img